December 19, 2025
சினிமா செய்திகள்

மிர்ச்சி சிவா பட டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு – படக்குழு மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.

இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் ஆகியோர்நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா கா பா ஆனந்த்,,பக்ஸ், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, ‘மைக்செட்’ அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். நடன காட்சிகளை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, சண்டைப்பயிற்சி போனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

இந்தப்படத்தில் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாய் ஷங்கர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சிவா நடிக்கிறார். செயற்கை நுண்ணறிவு கொண்ட சிம்ரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவரது தோற்றம், உடல்மொழி ஆகியவை அனைத்துத் தரப்பு இரசிகர்களுக்கும் பிடிக்கும்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இளம்பெண் கதாப்பாத்திரத்தில் நடிகை அஞ்சுகுரியன் நடித்திருக்கிறார்.

இவர்களுக்கிடையே நடைபெறும் ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி தான் படத்தின் கதை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரசிக்கும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.

பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் பெரிய அளவில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.திரைப்பட இரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ஏது.

இதற்கு இணையவாசிகளின் பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகவே படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Posts