பிக்பாஸில் நடிகர் மகத் வெளியேற்றம் – காயத்ரி ரகுராம் கருத்தால் சர்ச்சை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஓளிபரப்பாகி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார்.
மகத்தின் செயல்பாடுகள் குறித்து, ‘பிக் பாஸ் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
மகத் உறுதியாக இருங்கள். பிக் பாஸ் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி, நிஜ வாழ்க்கை அல்ல. உங்கள் நிஜ நண்பர்கள் வெளியே இருக்கிறார்கள். எது நிஜம் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்கள் எதிர்காலமும் திறமையும் உங்கள் கையில் தான் இருக்கிறது, அதை வெளியே பல வகைகளில் வெளிப்படுத்தலாம்.
பிக்பாஸ் என்பது ஒரு தளம். அங்கு தவறினால், மற்றொரு வாய்ப்பு உண்டு. இது முடிவு அல்ல. குறை சொல்பவர் மேலானவர் இல்லை.
பிக் பாஸ்-நிகழ்ச்சியில் நடக்கும் தவறுகள், அதைப் பற்றி குறை சொல்லும்/ அநாகரிகமாக பேசும் சிலரின் நிஜ வாழ்வில் செய்யும் தவறுகளை விடக் குறைவானவையே. உங்கள் தவறான கருத்துகளால் எங்களை பலவீனப்படுத்தவோ, முன்னோக்கி நகர விடாமல் செய்யவோ முடியாது.
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஒருத்தர திருந்த விட மாட்டீங்களே? என்று அவர் மீது பலர் விமர்சனங்கள் வைக்க அவர்களுக்கு உடனுக்குடன் காயத்ரிரகுராம் பதில் கொடுக்க, சர்ச்சை தொடருகிறது.