சினிமா செய்திகள் நடிகர்

தவறு செய்த நண்பன் மகத்தை விட்டுக்கொடுக்காத சிம்பு

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார்.

அவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர். மகத்துக்காகவே தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மகத்துக்கு பலத்த வரவேற்பு அளித்துள்ளார் நடிகர் சிம்பு.

இது தொடர்பாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள மகத், “பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய என்னை எனது நண்பன் சிம்பு இப்படித்தான் வரவேற்றார்.

‘லவ் யூ டா’ எனப் பதிவிட்டு, அத்துடன் ஒரு காணொலியையும் இணைத்துள்ளார். அதில்
சிம்பு, மகத்தை பலார் என கன்னத்தில் மூன்று முறை அறைந்துவிட்டு கட்டியணைத்துக்கொள்கிறார்.

எவ்வளவு அடிச்சாலும் வலிக்காது. அவ்வளவு அடி வாங்கிருக்கான் உள்ள’ என ஒரு வாய்ஸ் மட்டும் கேட்கிறது.

இது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தவறு செய்துவிட்டார் என்று வெளியே அனுப்பப்பட்ட மகத்தை விட்டுக் கொடுக்காமல் சிம்புவின் நட்பு
பலராலும் பாராட்டப் பெறுகிறது.

Related Posts