அதிகாரங்கள் எளிய மனிதர்கள் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன? என்கிற அவலங்களை நிஜத்துக்கு நெருக்கமாகச் சொல்லி, பார்க்கும்போது சிரிக்கவும் படம் முடிந்ததும் சிந்திக்கவும் வைத்திருக்கும் படம் மை லார்ட். கோயில்பட்டி தீப்பெட்டி தொழிலாளி சசிகுமார்,உயிரோடு இருக்கும்போது இறந்தவராகப் பதிவு
விமர்சனம்
கல்லூரி மாணவர் தேர்தல்களிலும் அரசியல் எப்படியெல்லாம் விளையாடுகிறது? என்பதை எடுத்துக் காட்டும் படமாக வந்திருக்கிறது ரெட்லேபில். கல்லூரி மாணவராக இருக்கும்போது துடிப்புடன் இருந்து அதற்காக காவல்நிலையம், நீதிமன்றம் வரை அலைந்த நாயகன்,கல்லூரி முடித்த பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கிறார்.ஆனால் அவர் படித்த கல்லூரி மாணவர் தேர்தல் நேரத்தில் அதில் ஈடுபட வேண்டிய கட்டாயம்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்? காதலினால் சாகாம லிருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். என்றார் பாரதியார். இந்த காதல் உணர்வுகளை மையப்படுத்திய திரைப்படங்களும் எந்நாளும்
1987 ஆம் ஆண்டு கமல்,அமலா,பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் பேசும் படம்.அப்படத்தின் சிறப்பு அது பேசாத படம் என்பதுதான்.ஆம்,அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வசனம் பேசாது. சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் 79 ஆம் நினைவுநாளில் காந்தி பேசுகிறார் எனும் பொருளில் காந்தி டாக்ஸ் எனும் படம்
உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் கிஷோர்,அவர் பணியாற்றும் அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் அவரது மனைவி சுபத்ரா ராபர்ட்,மகன் ஜஸ்வந்த் மணிகண்டன், மகள் தனன்யா வர்சினி ஆகியோரைக் கொண்ட அழகிய குடும்பம். நல்ல பணியில் இருந்தாலும் கிஷோருக்கு இசைத்துறையில் ஆர்வம்.தொலைக்காட்சிகளில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு முன்னேற முயல்கிறார்.அதில் அவருக்கு எதிர்பார்த்த
சந்திரமுகி அரண்மனை போல் ஒரு வீட்டுக்கு இலண்டனில் இருந்து வரும் ஒரு குடும்பம் வருகிறது.கணவன், மனைவி, இரு குழந்தைகள் கொண்ட அக்குடும்பத்துக்கு அந்த வீட்டுக்கு வந்தவுடன் பல சிக்கல்கள். உயிராபத்துகள்.அவை எதனா? அவற்றின் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் க்ராணி படம். க்ராணி (Granny) என்பது ஆங்கிலத்தில் பாட்டியைக் குறிக்கும் (அம்மம்மா/அப்பம்மா) சொல்.அதை இந்தப்படத்துக்குப்
கொரோனா பெருந்தொற்று காரணமாக,அதற்குமுன் கற்பனை செய்துகூடப் பார்த்திராத வகையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த காலகட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு சமுதாயச் சிக்கலைப் பேசியிருக்கும் படம் லாக்டவுன். நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், தோழியின் அழைப்பை ஏற்று ஒரு மதுவிருந்துக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து மகிழ்கிறார்.அந்த மகிழ்ச்சி பெரும் துயருக்குக் கொண்டு
சென்னையில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ்,திருமணம் செய்ய எண்ணி ஒரு மணப்பெண்ணைத் தேடிப் பிடித்து பழகுகிறார்.வருங்கால மனைவியின் ஆசைக்காக ஒரு கறுப்பு பல்சர் (பைக்) துள்ளுந்தை வாங்குகிறார்.அதை வாங்கியதிலிருந்து பல மர்மமான நிகழ்வுகள் நடக்கின்றன.அதற்கு, அந்தத் துள்ளுந்தில் ஒரு மனிதனின் ஆவி புகுந்திருக்கிறது என்றும் அது யாருடைய ஆவி? எதனால்
மதுரை பகுதிகளில் நடக்கும் கிடா சண்டைகள்,அவற்றில் கிடைக்கும் வெற்றி தோல்விகள், அதன் பின்விளைவுகள் ஆகியனவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாக்கி. தானி ஓட்டுநரான நாயகன் யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவர்.பணக்காரரான எதிர்நாயகன் ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையைக் கவுரவமாக நினைப்பவர்.யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாயை வீழ்த்துகிறது.அதனால்
நாயகன் குகன்சக்ரவர்த்தி,தற்கொலை செய்து கொள்ளப் போகும் முன்னாள் காதலியைக் காப்பாற்றி அவரோடு குடும்பம் நடத்துகிறார்.அதற்காக ஒரு கொலையும் செய்கிறார்.அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அவை என்னென்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை விவரிக்கும் படம்தான் வங்காள விரிகுடா. வங்காள விரிகுடா என்று பெயர் வைக்கக் காரணம்,பேரறிஞர் அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகிய எல்லோரும் வாழும்





















