உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு ஆகியன தமிழ்ப்பண்பாட்டுடன் இயைந்திருக்கின்றன என்பது இப்போது வெளிப்படுகிற செய்தி.இங்கிருந்து சுமார் 5000 கிமீ தொலைவில் இருக்கும் கொரியாவின் பண்பாடுகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிற ஆழமான தகவலை அழகான காட்சிமொழியுடன் கலந்து
விமர்சனம்
ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் 66 ஆம் எண் வீட்டில் வசிக்கும் நாயகிக்கும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் 99 ஆம் எண் வீட்டில் வசிக்கும் பெண்மணிக்கும் நட்பு.அதனால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.அவை என்ன? அவற்றின் விளைவென்ன? என்பனவற்றை திகிலுடன் சொல்லியிருக்கும் படம்தான் 99/66. நாயகியாக நடித்திருக்கும் ரக்சிதா மகாலட்சுமி படத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்.அதை
அண்மைக்காலமாக முக்கோணக் காதல்கதைகள் வருவதில்லை.அந்தக் குறையைப் போக்கும் வண்னம் வந்திருக்கும் படம் காதல் ரீசெட் ரிபீட். நாயகி ஜியா சங்கருக்கு மறதிநோய் வருகிறது.அதைப் பயன்படுத்தி நான்தான் உன் காதலன் என்று அறிமுகமாகிறார் நாயகன் மதுமகேஷ்.ஆனால் உண்மை வேறு. அது என்ன உண்மை? அது நாயகிக்குத் தெரிந்ததா? கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம். நாயகனாக
ஏறுதழுவுதல் போல் மஞ்சுவிரட்டு என்பதும் நம்முடைய பாரம்பரிய மாடுபிடி விளையாட்டுகளுள் ஒன்று.அதை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது வடம். இப்படத்தின் நாயகன் விமல்,நிறைய பஞ்சாயத்துகளுக்குச் சொந்தக்காரர்.அடிதடி,வம்பு வழக்கு என்று இருப்பவர்.இன்னொரு பக்கம் மஞ்சுவிரட்டுக்காளைக்குச் சொந்தக்காரர்.யாராலும் அடக்கமுடியாத காளையை வைத்திருப்பவர் என்கிற பெருமையும் உண்டு.ஒருகட்டத்தில் காளை
கொலைகளைப் பற்றித் துப்புதுலக்கும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது அனோமி. சமூக விதிமுறைகள் பலவீனமாகி, தனிநபர்கள் சமூகத்தில் தங்களைக் கைவிடப்பட்டவர்களாக உணரும் ஒரு நிலையை அனோமி என்று குறிப்பிடுகிறார்கள். இந்தக்கதையிலும் மனதளவில் பலவீனமானவர்கள் தொடர்ந்து மரணமடைகிறார்கள்.அது தற்கொலை என்று சொல்லப்படுகிறது.உண்மையிலேயே தற்கொலைதானா? அல்லது கொலையா? கொலை என்றால் யார் செய்தார்கள்?
படத்தின் தலைப்பு நட்புக்கான அடையாளமாகச் சொல்லப்படும் சொல்லான முஸ்தபா முஸ்தபா.அதை வைத்துக் கொண்டு நட்பு,காதல்,நகைச்சுவை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ்,காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அந்தத் திருமணத்துக்குத் தடையாக ஒரு சிக்கல் வருகிறது.அது என்ன சிக்கல்? அதிலிருந்து நாயகன்
தடயம் என்கிற தலைப்பே இது காவல்துறை விசாரணையை அடிப்படையாகக் கொண்ட தொடர் என்பதைச் சொல்லிவிடுகிறது.தமிழ்நாடு ஆந்திரா எல்லையோர கிராமமொன்றில் நடக்கும் தொடர் கொலைகளும் அவை தொடர்பான விசாரணைகளையும் ஆறு அத்தியாயங்களாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,அதற்குத் தக்க அப்படியே இருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.மதிநுட்பம்
ஒரு கிராமத்தில் வாழும் வயது முதிர்ந்த பெண்மணி ராதிகா சரத்குமார்.அவருக்கு அருள்தாஸ்,சிங்கம்புலி,பாலசரவணன் ஆகிய மூன்று மகன்கள்.ஒரு மகள் ரேச்சல் ரெபக்கா.கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குப் பணம் கொடுத்து முரட்டுத்தனமாக வசூலித்துக் கொண்டிருப்பவர்.அவரைப் பார்த்து ஊரே அச்சப்படுகிறது. மகன்கள் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்றாலும் தெனாவெட்டாகத் திரிபவர்.
மகளின் காதலை ஏற்கமறுக்கும் தந்தை,காதலனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.அவர் மீன்பிடி படகு பழுதுநீக்கும் தொழில் செய்பவர் என்பதால் கடலும் படகுகளும் அத்துபடி.அதனால் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து முடித்துக்கட்டத் திட்டமிடுகிறார்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆழி. பாசமுள்ள தந்தை, திறன்மிக்க பழுதுநீக்குநர், இவை இரண்டுக்கும் மேலாக
சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18, கேஸ் ஆஃப் கொண்டனா ஆகிய படங்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் படம் செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம். காவல்துறை விசாரணையை மையமாகக் கொண்ட படம் என்பது பெயரிலேயே தெரிந்துவிடுகிறது. நகரத்தையே உலுக்கும் வகையில் இரட்டைக் கொலை நடக்கிறது.மனநலம் பிறழ்ந்தவரால்தான் இப்படிச் செய்யமுடியும் என உடற்கூராய்வு சொல்கிற நேரத்தில் மனநலம் குன்றிய ஒருவர் சிக்குகிறார்.























