நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது குறித்த ஆதரவு மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் டிஎன் 2026. வடமாநிலத்தைச் சேர்ந்த நட்டி,பிழைப்புக்காக சென்னை வருகிறார்.வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு அவரை நடிகராக்கி,பின்பு உச்ச நடிகராக்கி விடுகிறது.அவருக்கு உதவியாக
விமர்சனம்
ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் செல்வராகவன்,குஷி ரவி.சிறிய உணவகம் நடத்திக் கொண்டு மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.திடீரென ஒருநாள் மனைவி குஷி ரவி தற்கொலை செய்துகொள்கிறார்.அதனால் நிலைகுலைந்து போகும் செல்வராகவன்,அதன்பின் என்ன செய்கிறார்? அதன் விளைவென்ன? என்பனவற்றைச் சொல்லியிருக்கும் படம் மனிதன் தெய்வமாகலாம். அன்பான,அமைதியான குடும்பத்தலைவன்,அடிபட்ட புலி, சமுதாயப் பொறுப்பு
இப்போது 2026 ஆம் ஆண்டில் இருக்கிறோம்.இன்னும் பதினான்கு ஆண்டுகள் கழித்து 2040 ஆம் ஆண்டில் நடக்கின்ற கதையைக் கொண்ட படம் எல் ஐ கே. லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பதன் சுருக்கம்தான் எல் ஐ கே. காதலித்துத் தோற்பவர்கள் காதல் மீதே கொலைவெறி கொள்வார்கள்.அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தான் பெற்ற துன்பத்தை இந்த வையகத்தில் வேறுயாரும் அடைந்துவிடக்கூடாது என எண்ணி, எல் ஐ கே
வெளியில் திருடினால் சிறையில் தள்ளுவார்கள்.சிறையிலேயே திருடினால் என்ன செய்வார்கள்? என்கிற சுவையான கேள்வியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இணையத் தொடர் காக்கி சர்க்கஸ். சிறைக்குள் ஒரு கண்ணகி கோயில் இருக்கிறது.அதன் உண்டியல் பணம் திருட்டுப் போகிறது.அதனால் பதறும் சிறைக்காவலர் அந்த விசயம் வெளியே தெரியாமல் இருக்க கடன் வாங்கி அந்தப்பணத்தை வைக்க முயல்கிறார்.அந்தப்பணமும்
மோட்டார் சைக்கிள் என்று சொல்லப்படும் துள்ளுந்துப் பந்தயங்கள் குறித்த படங்கள் வந்ததில்லை என்கிற குறையைப் போக்கும் விதமாக வந்திருக்கும் படம் பைக்கர். தமிழ்த்திரைப்பட இரசிகர்கள் மறக்கமுடியாத இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் துள்ளுந்துப் பந்தய வீரர்.தன்னைப் போல் தன் மகன் சர்வானந்த்தும் வரவேண்டுமென விரும்புகிறார்.சர்வானந்த்தும் அப்படியே செய்கிறார்.அதனால் அவரை உலகஅளவில்
தூத்துக்குடி துறைமுகம் அருகே வாகனங்கள் பழுதுநீக்குநராக நாயகன் லெஜண்ட் சரவணன் பணிபுரிகிறார்.துறைமுகத்துக்குள் சட்டவிரோதமாக நடக்கும் ஒரு விசயத்தைக் கண்டுபிடிக்க காவல்துறை நாயகனின் உதவியைக் கேட்கிறது.அவர் மறுக்கிறார்.அதனால் அவருடைய பாசமகளைக் கடத்தி வைத்துக் கொண்டு துறைமுகத்தில் சட்டவிரோதச் செயல்கள் செய்யும் வில்லன் கடத்திவிட்டார் என்று சொல்கிறார்கள்.அதனால் வெகுண்டெழும் நாயகன்
அடுத்தடுத்து மூன்று பெண்கள் மாடியிலிருந்து விழுந்து மரணிக்கிறார்கள்.அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பரத்த்துக்கும் அவர் மனைவிக்கும் சண்டை. குற்றவாளி பரத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறார் ஆகிய விசயங்களை வைத்து பரபரப்பு படபடப்பான த்ரில்லர் படமாக வந்தது காளிதாஸ்.2019 இல் வந்து வெற்றி பெற்ற அந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது காளிதாஸ் 2. இந்தப்படத்தில்
மகிழ்ச்சி என்பது பொருட்களை நுகர்வதில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம்.ஊடக விளம்பரங்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் பிராண்ட் கலாச்சாரம் ஆகியனவற்றிற்கு ஆட்படுதல்.தங்கள் அடையாளத்தை தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆசை.புதியபொருட்கள் உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டு, பழையன தேவையற்றது என்கிற மனநிலை.வசதிக்காக பொருட்களை வாங்கி, கடனில் மூழ்கும் நிலை
தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் வந்திருக்கிறது நீளிரா.நீண்ட இரவு என்று பொருள்.1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக இப்படத்தின் கதை இருக்கிறது. ஒரு திருமண வீடு.அதன் மகிழ்ச்சியினூடே, போர்ச் சூழல் காரணமாக எவ்விதச் சிக்கலும் இல்லாமல் திருமணம் நடக்கவேண்டும் என்கிற பதட்டம் அனைவரிடமும்
கடவுள் நம்பிக்கை போல் சாத்தான் நம்பிக்கையும் மக்களிடம் இருந்திருக்கிறது.அவர்கள் சாத்தானுக்கு மனித உயிர்களைப் பலி கொடுக்கும் அளவுக்குத் துணிந்தவர்கள்.அம்மக்கள் வசிக்கும் கிராமத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மர்ம மரணங்கள் நடக்கின்றன.அவற்றை விசாரிக்க காவல்துறை வருகிறது.அவர்களுடைய விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின்றன.இன்னொரு பக்கம் கதாநாயகனும் இந்த விசாரணைக்குள்























