படத்தின் பெயருக்கேற்ப அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.ஒருவர் வறுமையில் வாழ்பவர்.இன்னொருவர் பெரும் பணக்காரர்.வறுமையில் வாழும் அருண்விஜய் பணக்காரரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்குப் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயன்றிருக்கிறது படம். இரட்டை
விமர்சனம்
சிறைக்கைதி அப்துல்ரவூப். கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்.அவரை விசாரணைக்காக சுமார் நானூறு கிலோமீட்டர் (வேலூரிலிருந்து சிவகங்கை) அழைத்துச் செல்கிறது கதிரவன் தலைமையிலான குழு.இடையில் அந்தக் கைதி தப்புகிறார்.அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்தக் கைதியின் பின்னணி என்ன? எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்விக்களுக்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம்
வைகை அணை கட்டியதால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த நாயகன் சண்முகபாண்டியன், ஊர் பெரியமனிதராக வலம்வரும் சரத்குமாருடன் இருக்கிறார்.எப்படியாவது பெரும் பணக்காரனாக வேண்டும் என்று சண்முகபாண்டியன் நினைக்கிறார்.அவர் நினைப்பைச் செயலாக்க சரத்குமார் உதவுகிறார்.இவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் நினைத்தது நடந்ததா? என்பதை முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து சொல்ல
இசை என்பது மக்கள் மனங்களில் இசைந்திருக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட ஓசை.அவற்றில் பல்வேறு வகைகள் இருக்கலாம்.ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.அப்படிப்பட்ட இசையுலகிலும் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை.அதில் ஓர் அரசியல் இருக்கிறது.அதன் பின்னால் ஒரு வலி இருக்கிறது.அவற்றை உடைத்தெறிந்து உலா வரும் வலிமையும் இருக்கிறது என்பதை
இயற்கையைச் சிதைக்கும் மனிதப் பேராசையை விமர்சித்து வெளிப்படுத்தும் வகையில் பல படங்கள் வந்திருக்கின்றன.அவற்றின் வரிசையில் இணைகிற படம் மகாசேனா. பழங்குடியினத்தைச் சேர்ந்த நாயகன் விமல், சேனா என்ற யானையை வளர்க்கிறார்.அந்த யானை அவருடைய மகளையே தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்றுவிடுகிறது.அந்த யானையைத் தேடிச் செல்கிறார் விமல்.அதேநேரம், மலைகிராமக் கோயிலில் இருக்கும் மதிப்புமிக்க
நாட்டில் நடக்கும் மோசடிகள் பலவிதம்.அதுவும் வரவு, செலவு,வர்த்தகம் ஆகிய எல்லாம் இணையதளம் வாயிலாக நடக்கிற இக்காலகட்டத்தில் அதிலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன.அவற்றில் முக்கியமான நான்கு வித மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் படம் நிர்வாகம் பொறுப்பல்ல. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன்.அவர் பல
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அங்கம்மாள். இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான பெண்ணாக இருக்கிறார். அந்தக் காலப் பெண்கள் போல இரவிக்கை அணியாத பெண்மணியாக இருப்பதுதான்
கட்டிடப் பொறியாளர் நாயகி சாக்ஷிஅகர்வாலுக்கும் ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் விஜய் விஷ்வாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.அதேநேரம் சாக்ஷி அகர்வாலை கல்யாணம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் கட்டுமான தொழிலாளி செல்லக்குட்டி.அது ஏன்? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் சாரா. படத்தின் முதன்மை
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது முன்னோர் மொழி.ஆனால் நடைமுறை அப்படியில்லை.பல நிரபராதிகள் தண்டிக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.அப்படியொரு நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ஐபிஎல். இந்தியன் பீனல் லா என்கிற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்தான் இந்த ஐபிஎல். குற்றம் செய்யாத கிஷோர் மீது ஒரு வழக்கில் குற்றம்
கல்லூரி மாணவரான தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார். எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும்,அவரை நல்ல மனிதனாக மாற்ற முடியும் என முனைவர் பட்ட ஆய்வறிக்கை கொடுக்கிறார் நாயகி கீர்த்தி சனோன். வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் கீர்ததி





















