நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல் இண்டலிஜென்ஸ் என்ற சொல்லின் சுருக்கம்தாம் யு ஐ. கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கி, நாயகனாகவும்
தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள் வாத்தியார் உருவான கதையும் பெருமாள் வாத்தியாருக்கு என்ன நடக்கிறது? என்பதும் அரசாங்க அதிகாரிகள் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இணைந்த
1999 ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ்த் திரையுலகின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 18 அன்று, முன்னணி நடிகர்கள்,
ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒய்.ஜி.மகேந்திரன்,சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ.லெனின்
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர்
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14 மாலை வெளியானது.இப்படத்தை,தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்… ‘வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’
2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி,அசோக்செல்வன்,பாபிசிம்கா,எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. இதை எஸ்.ஜே.அர்ஜுன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். முதல்பாகத்தின் இறுதியில்,அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்குப் பதிலாக கருணாகரன் அரசியலில் இறங்கியிருப்பார்.இந்த பாகத்தைத் தொடர அவரே மையமாக
ஒரு குழுவாக ஓரிடத்துக்குச் செல்வார்கள்.போகிற இடத்தில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நடக்கும் அல்லது கொலைகள் நடக்கும்.அவை ஏன்? எதற்காக? என்கிற கேள்விகளுக்கான விடையை கடைசியில் சொல்வார்கள்.இதுவும் அந்த வரிசையில் சேரக்கூடிய படம்தான்.ஆனால் எந்தப்படத்திலும் சொல்லாத புது விசயத்தைச் சொல்லி வேறுபட்டு நிற்கும் படம் அந்தநாள். இப்படத்தின் நாயகன் ஆர்யன் ஷாம் திரைப்பட இயக்குநர்.அவர், புதிய
ஒரு விபத்தினால் இரண்டாண்டுகள் நினைவை இழக்கிறார் நாயகன் சித்தார்த்.அந்நிலையில் அவர் நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்க்கிறார்.பார்த்ததும் காதல் கொள்கிறார்.உடனே ஆஷிகாவின் புகைப்படத்தை அம்மாவிடம் காட்டி திருமணம் செய்து வைக்கச் சொல்கிறார்.அம்மாவுக்குப் பேரரதிர்ச்சி.அது ஏன்?எதற்காக? என்பதை விவரிக்கும் படம் தான் மிஸ் யூ. காதல் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் சித்தார்த்.காதல்
நான்கு வெவ்வேறு கதைகள்.அவை ஒரு புள்ளியில் இணையும் வகை திரைக்கதை கொண்ட படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ். சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய எல்லா நிலைகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தி அவற்றின் கொடுமைகளை பரப்புரை தொனியின்றி உரைத்திருக்கிறது இந்தப்படம். நான்கில் ஒரு கதையில், தானி ஓட்டுநராக நடித்திருக்கிறார் பரத்.மனைவியின்























