அமலாபால் வெளியிட்ட காணொலி – தொடரும் திருமண சர்ச்சை
நடிகை அமலாபால் அண்மையில் பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. அத்தகவல் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில்,அமலாபால் ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தனது தாயுடன் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தைக் கழித்துவருவது தெரிகிறது.
அவர் வெளியிட்டுள்ள காணொலியில், மழை தூறல் வருகிறது தூறல் தொடங்கியதும், மரத்தில் இருக்கும் மாங்காய்களை முத்தமிடுகிறார். பின்னர் வெள்ளை சியாமிஸ் பூனையை தூக்கிக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடி, மரத்தில் இருக்கும் மாங்காய்களுக்கு முத்தம் தருகிறார். பின்னர் கறுப்பு, வெள்ளை என தலா ஒவ்வொரு நாய் காட்சியில் வருகின்றன. மகள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து, அமலா பாலின் அம்மா, பெருமழை வந்தால் எப்படி இருக்கும் என்கிறார்.
இந்தக் காணொலியைப் பதிவேற்றிய அமலாபால், “எல்லாமே முதலில் சிறப்பு வாய்ந்தவை. லாக் டவுனில் முதல் மழை. எங்கள் லிட்டில் பேபி மூனின் முதல் மழை. 2020-இன் முதல் மாம்பழங்கள். மழை பிரபஞ்சத்தின் மகிழ்ச்சியான அறிகுறி. வீடியோ மற்றும் உரையாடல்கள்: அம்மா ” என்று எழுத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதை வைத்துப் பார்த்தால் அவருடைய திருமணச் செய்தி கேள்விக்குறியாகியுள்ளது.











