தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றிப் படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்டப்படங்கள்,
தமிழின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இன்று ஓர் அறிவிப்பை வெளீயிட்டுள்ளது. அதில், நாளை அந்நிறுவனத்தின் 20 ஆவது தயாரிப்பாக சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்க சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கவிருப்பதாகவும் அப்படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால்,பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன். இப்படம் 2021 பொங்கலையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்குகள் வெளியீட்டு உரிமையை செவன்ஜி சிவா எனும் விநியோகஸ்தர் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காகத் தயாரிப்பாளருக்குக் கொடுக்கப்படவிருக்கும்
கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதன் இரண்டாம்பாகம் தயாராகவிருக்கிறது என்று பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டுவந்தது. ஆனால் நடக்கவில்லை. இவ்வாண்டு கொரோனா காரணமாக எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்த நேரத்தில்,கவுதம் மேனன் சிம்பு கூட்டணியில், கார்த்திக் டயல் செய்த எண் என்கிற பெயரில் 12 நிமிட
நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி பெருவாரியான வெற்றியைப் பெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் அவர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொறுப்பேற்றவுடன் முதன்முறை நேற்று ( டிசம்பர் 7 ) செயற்குழுக் கூட்டம் நடந்தது. நவம்பர் 22 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள்
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்தார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வந்தனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின்
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ். ஜே சூர்யா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி
இவ்வாண்டுத் தொடக்கத்தில் சனவரி 12 ஆம் தேதி வெளியான தெலுங்குப்படம் அலா வைகுந்தபுரம்லோ. த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு தெலுங்குத் திரையுலகில் பெரும்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.



















