கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்திருக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இந்தத் தேதியில் படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில் அதே தேதியில் வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட இன்னொரு படம் நயன்தாரா
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறதாம். 2019
புது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம் கோலமாவு கோகிலா. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் முன்னோட்டம் ஜூலை 5 மாலை வெளியிடப்பட்டது. வெளியிட்டவுடன் பல இலட்சம் பாரவையாளர்களைச் சென்றடைந்த அந்த முன்னோட்டத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய ட்விட்டரில், சூப்பர் ட்ரெய்லர் பெரிய வெற்றி பெறும்
கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் அறம். அந்தப்படம் வெற்றி பெற்றதோடு அதுபற்றிய பரவலான விவாதங்களையும் உருவாக்கியது. அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய படம் என்பதால் அதற்கு அவ்வளவு வரவேற்பு. இக்காலத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநரை பெரிய கதாநாயகர்கள் தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்கள் சுற்றி வளைப்பார்கள்.
டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இப்போது இயக்கியிருக்கும் படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராக்ஷிகண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, இந்தப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? என்கிற கேள்வி எல்லோருக்கும்
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் இப்போது, ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது. அஜித்,நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளும், ஒரு சண்டைக் காட்சியும் அங்கு படமாக்கப்பட்டன. அத்துடன் முதல் கட்டப்
இயக்குநர் சிவா இயக்கி வரும்‘விசுவாசம்’படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே திட்டமிட்ட நாட்களை கடந்து படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து வருவதால் அஜித்திற்காக போடப்பட்ட அறையை நீட்டிக்க வேண்டிய நிலை எழுந்தது. ஆனால் அந்த அறை பாலிவுட் ஆக்டர் ரன்வீர் சிங்கிற்கு ஏற்கெனவே புக் செய்யப்பட்டதால்
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பிலிம்ஃபேர் பத்திரிகையின் திரைப்பட விருது நிகழ்ச்சி ஜூன் 16 அன்று நடந்தது. அந்நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகினர் புறக்கணித்தனர். அது எதனால் என்பதை விளக்கும் நடிகர் சங்கத்தின் அறிக்கை… கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள்,விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்த
சர்ச்சைக்குரிய குறும்படங்களான மா, இலட்சுமி ஆகியவற்றின் மூலம் கவனம் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இரண்டுமே பாலியல் தொடர்பான குறும்படங்கள் என்பதால், இவை பரவலான கவனத்தையும் கடும் விமர்சனங்களையும் சந்தித்தன. மிகப்பெரிய விவாதத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பின. கே.எம்.சர்ஜுன், ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற முழுநீள படத்தையும் இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார்,
நயன்தாரா நாயகியாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என்ற முதல் பாடல் காணொலி, கடந்த மார்ச் 8-ம் தேதி





















