Home Archive by category விமர்சனம் (Page 21)

விமர்சனம்

விமர்சனம்

மர்மர் – திரைப்பட விமர்சனம்

கிராமங்களில் சொல்லப்படும் பழங்கதைகள் உண்மையானவையா? என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் படங்களை எடுக்கும் குழுவினர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் சொல்லப்படும் ஏழு கன்னிகள் கதையை ஆவணமாக்க காட்டுக்குள் செல்கிறார்கள்.அங்கு என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்வதுதான் மர்மர் படம்.
விமர்சனம்

நிறம் மாறும் உலகில் – திரைப்பட விமர்சனம்

நான்கு கதைகள்,நான்குமே அம்மா பாசத்தை மையமாகக் கொண்டவை.அதை வைத்துக் கொண்டு பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில். ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜா வடிவுக்கரசி,கனிகா,ஆதிரா,துளசி ஆகியோர் பெற்றோரின் சோகங்களும் பின்னிப்பிணைந்திருப்பதுதான் இந்தப்படம். மகன்களின் அம்மா மீதான பாசத்தை வெவ்வேறு விதமாக
விமர்சனம்

ஜெண்டில்வுமன் – திரைப்பட விமர்சனம்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற காலம் மலையேறிவிட்டது என்பதை உரத்துச் சொல்லியிருக்கும் படம் ஜெண்டில்வுமன். கணவன் ஹரிகிருஷ்ணன் மீது அன்பாக இருக்கும் மனைவி லிஜோமோல்ஜோஸ்.ஒரு கட்டத்தில் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதைத் தெரிந்தவுடன் கலங்கிப் போகாமல் அனைவரும் அதிரும்படி அதிரடியாகக் கணவரைக் கொலை செய்துவிடுகிறார்.அதன்பின் என்னவெல்லாம்
விமர்சனம்

எமகாதகி – திரைப்பட விமர்சனம்

அறிவியலின் அசுர வளர்ச்சி நம்பவியலாத நாகரிக வளர்ச்சி ஆகியன நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் சாதிய பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.இச்சிக்கலை திரைமொழியில் பேசியிருக்கும் படம் எமகாதகி. படத்தின் நாயகி ரூபா கொடுவாயுர் தற்கொலை செய்துகொள்கிறார்.இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு சடலத்தைத் தூக்க முடியாத அளவு
விமர்சனம்

சப்தம் – திரைப்பட விமர்சனம்

ஈரம் படத்தில் தண்ணீரில் பேய் இருக்கிறதெனச் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் அறிவழகன் ஒலியில் பேய் என்று சொல்லி பயமுறுத்த முனைந்திருக்கும் படம் சப்தம். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் தகவல் பரவுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம்
விமர்சனம்

கூரன் – திரைப்பட விமர்சனம்

உலகம் உயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்றொரு புகழ்பெற்ற சொல்லாடல் உண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என்று அர்த்தமாம் மகிழுந்து ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி) கொல்லப்பட்டுவிட அந்தக் கொலைக்கு நீதி கேட்டு ஒரு நாய் போராடுவதுதான் இந்தப்படம்.அது எப்படி முடியும்? என்கிற கேள்விக்கான விடைதான் திரைக்கதை.
விமர்சனம்

அகத்தியா – திரைப்பட விமர்சனம்

பேய்ப்படங்களுக்குக் குறைந்தபட்சப் பாதுகாப்பு உண்டு என்பதால்,அதை மையமாகக் கொண்டு அதனுடன் பழங்காலம்,சித்தமருத்துவம்,அரிய மருந்து உள்ளிட்ட விசயங்களைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் அகத்தியா. திரைப்படத்துறையில் கலை இயக்குநராக இருக்கும் நாயகன் ஜீவா,ஒரு பழங்கால அரண்மனையை வாடகைக்கு எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து காட்சிப்பொருளாக்க முனைகிறார்.அப்போது நடக்கும் சில அதிரடி
விமர்சனம்

சுழல் 2 – இணையத் தொடர் விமர்சனம்

2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது.மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன. பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்? என்று
விமர்சனம்

டிராகன் – திரைப்பட விமர்சனம்

படிக்கும் காலத்தில் இதுதான் பெருமை என்று நினைத்துச் செய்யும் செயல்கள் வாழும் காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கருத்தை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கவர்ச்சி ஆகிய இனிப்புகளைத் தடவிக் கொடுத்திருக்கும் படம் டிராகன். பனிரெண்டாம் வகுப்பில் 96 விழுக்காடு மதிப்பெண் பெற்று வென்று பொறியியல் படிக்கப் போகும் நாயகன் பிரதீப் ரங்கநாதன், பெண்களைக் கவரவேண்டும் என்கிற ஒற்றைக்
Uncategorized விமர்சனம்

ராமம் ராகவம் – திரைப்பட விமர்சனம்

அப்பா மகன் பாசம் மற்றும் உறவு குறித்து நிறையப் படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேரும் இந்தப்படத்தில் முந்தைய படங்களில் இல்லாத ஒரு சிக்கல் வைக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரி நேர்மையானவர் எனப் பெயர் பெற்றவர் சமுத்திரக்கனி. அவருடைய மகன் தனராஜ் கொரனானி. அப்பாவுக்கு நேரெதிர்.நிறைய கெட்ட பழக்கங்கள்.ஒரு கட்டத்தில் அப்பாவைக் கொல்ல நினைக்கிறார். அது ஏன்? அவர் நினைத்தது