உயிரின் மகத்துவத்தையும் உறவுகளின் மேன்மையையும் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட். நாயகன் ரியோராஜும் நாயகி கோபிகாரமேஷும் இணைந்து வாழ்கின்றனர்.அவர்கள் உறவின் காரணமாக நாயகி கர்ப்பம் தரிக்கிறார்.அதை நாயகன் ஏற்க மறுக்கிறார்.இதனால் பல குழப்பங்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச்
விமர்சனம்
உலகமே நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கிறது.தனக்கு என்ன தேவை என்று எண்ணாமல் பக்கத்து வீட்டுக்காரன் என்ன செய்கிறான்? எதிர் வீட்டுக்காரன் என்ன வாங்குகிறான்? என்று பார்ப்பதும், தொலைக்காட்சி மற்றும் இணையங்களில் குவியும் ஆடம்பரப் பொருட்களின் விளம்பரங்களின் மீதான மயக்கமும் ஒரு நல்ல மனிதனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கும் படம்
படவா என்கிற பெயரைப் பார்த்ததுமே பொறுப்பற்ற இளைஞர்களைப் பற்றிய படமென்று எண்ணத் தோன்றும்.ஆனால், இந்தப்பெயரை வைத்துக் கொண்டு இயற்கையைப் பாதுகாப்பது விவசாயத்தை மேம்படுத்துவது போன்ற உயரிய விசயங்களைப் பேசியிருக்கிறார்கள். வேலை வெட்டியின்றி சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு சுற்றிருக்கும் நாயகன் விமல்,ஊர்த்தலைவராகி அரசாங்கத்தின் ஒட்டுமொத்தப் பாராட்டைப் பெறுமளவுக்கு
நாட்டுக்குள் வீட்டுக்குள் காட்டுக்குள் நடக்கும் பேய்க்கதைகளைப் பார்த்திருப்போம்.இது கடலுக்குள் நடக்கும் பேய்க்கதை. தூத்துக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தோர் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடிவதில்லை.காரணம் அங்கொரு ஆன்மா மீன்பிடிக்க வருகிறவர்களைக் கொன்றுவிடுகிறது.இதனால் பல்லாண்டுகளாக அக்கிராம இளைஞர்கள் சரியான வேலை வாய்ப்பின்றித் தவிக்கிறார்கள்.அதனால் அவர்கள் குடும்பமும்
கிராமங்களில் சொல்லப்படும் பழங்கதைகள் உண்மையானவையா? என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் படங்களை எடுக்கும் குழுவினர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் சொல்லப்படும் ஏழு கன்னிகள் கதையை ஆவணமாக்க காட்டுக்குள் செல்கிறார்கள்.அங்கு என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்வதுதான் மர்மர் படம். ரிஷி கதாபாத்திரத்தில் ரிச்சி கபூர், மெல்வின் கதாபாத்திரத்தில் தேவ்ராஜ்
நான்கு கதைகள்,நான்குமே அம்மா பாசத்தை மையமாகக் கொண்டவை.அதை வைத்துக் கொண்டு பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில். ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜா வடிவுக்கரசி,கனிகா,ஆதிரா,துளசி ஆகியோர் பெற்றோரின் சோகங்களும் பின்னிப்பிணைந்திருப்பதுதான் இந்தப்படம். மகன்களின் அம்மா மீதான பாசத்தை வெவ்வேறு விதமாக
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற காலம் மலையேறிவிட்டது என்பதை உரத்துச் சொல்லியிருக்கும் படம் ஜெண்டில்வுமன். கணவன் ஹரிகிருஷ்ணன் மீது அன்பாக இருக்கும் மனைவி லிஜோமோல்ஜோஸ்.ஒரு கட்டத்தில் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதைத் தெரிந்தவுடன் கலங்கிப் போகாமல் அனைவரும் அதிரும்படி அதிரடியாகக் கணவரைக் கொலை செய்துவிடுகிறார்.அதன்பின் என்னவெல்லாம்
அறிவியலின் அசுர வளர்ச்சி நம்பவியலாத நாகரிக வளர்ச்சி ஆகியன நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் சாதிய பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.இச்சிக்கலை திரைமொழியில் பேசியிருக்கும் படம் எமகாதகி. படத்தின் நாயகி ரூபா கொடுவாயுர் தற்கொலை செய்துகொள்கிறார்.இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு சடலத்தைத் தூக்க முடியாத அளவு
ஈரம் படத்தில் தண்ணீரில் பேய் இருக்கிறதெனச் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் அறிவழகன் ஒலியில் பேய் என்று சொல்லி பயமுறுத்த முனைந்திருக்கும் படம் சப்தம். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் தகவல் பரவுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம்
உலகம் உயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்றொரு புகழ்பெற்ற சொல்லாடல் உண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என்று அர்த்தமாம் மகிழுந்து ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி) கொல்லப்பட்டுவிட அந்தக் கொலைக்கு நீதி கேட்டு ஒரு நாய் போராடுவதுதான் இந்தப்படம்.அது எப்படி முடியும்? என்கிற கேள்விக்கான விடைதான் திரைக்கதை.





















