மாயாஜாலக் கதைகளை வரலாற்றுப் பினபுலத்தோடு சொன்னால் அது காவியமாகிவிடும்.அந்த முயற்சியில் சமகாலம் மற்றும் வரலாற்றுக் காலம் ஆகியனவற்றைக் கதைக்களமாக கொண்டு வெளியாகியிருக்கும் படம் மிராய். பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய இரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீயசக்திகள் இந்த 9
விமர்சனம்
காவல்துறையில் கடைநிலைக் காவலராகச் சேரும் நாயகன் அதர்வா,ரோந்துப் பணியின்போது ஒரு சந்தேக நபரை விசாரிக்க முற்படுகிறார்.அந்த நபர் தப்பித்து ஓடுகிறார்.அவரைத் துரத்திச் செல்லும் அதர்வா உள்ளிட்ட காவலர்கள் ஒரு பெரிய சிக்கலில் சிக்குகிறார்கள்.அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அந்தச் சிக்கல் என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் தணல். காவல்துறை வேடம் அதர்வாவுக்குப்
நீ ஒரு முறைதான் வாழ்கிறாய் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் You Only Live Once என்று வரும். இதில் வரும் நான்கு சொற்களின் முதலெழுத்துகளை மட்டும் வைத்து வைக்கப்பட்டிருக்கும் பெயர் தான் யோலோ. யோலோ என்ற பெயரில் வலையொளி நடத்துகிறார்கள் நாயகன் தேவும், நாயகி தேவிகாவும்.அதில் மற்றவர்களைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லி அதற்கான
ஒரு கிராமம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.அடிக்கடி மோதல்கள்.அதனால் அந்த மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் திடீரென இறந்து போகிறார்.அவருடைய மரணத்துக்குப் பின் ஓர் அதிசயம் நடக்கிறது.அதை வைத்து அந்த ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்த முயல்கிறார் நாயகன்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம்தான் பாம். இதுவரை பார்த்திராத
திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் கதாநாயகன்.அதனால் பல போராட்டங்கள்.அந்தப் போராட்டமெல்லாம் அந்தத் துறைக்குள் என்று நினைத்தால் அதுதான் இல்லை.அவர் வீட்டில் ஒரு மரணம் நடக்கிறது.அது கொலையாக இருக்கலாம் என்கிற ஐயம் காவல்துறைக்கு வருகிறது.காவல்துறையின் பார்வை நாயகன் பக்கமும் திரும்புகிறது.அதிலிருந்து தப்ப நாயகன் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன? அவர்
காயல் என்பது கடல் சார்ந்த இடம்.கடலையும் ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்து எழுத்தாளர் தமயந்தி எழுதி இயக்கியிருக்கும் படத்தின் பெயரும் காயல். கடல்சார் ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த்வர்.அவருக்கு உயர்சாதி நாயகி காயத்ரி மீது காதல்.வழக்கம் போல் அதற்கு எதிர்ப்பு.அதனால் நாயகி தற்கொலை செய்கிறார்.அதன்பின் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரின் நிலை
காதலைவிட மது முக்கியம் என்று நினைக்கும் நாயகன்.அப்படிப்பட்டவரை உருகி உருகி காதலிக்கும் நாயகி.இந்தக் காதலின் முடிவென்ன? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் உருட்டு உருட்டு. நாயகனாக நடித்திருக்கும் நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ், காதல்,நடனம்,உணர்ச்சிகர நடிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான வேடம்.பல இடங்களில் தேர்ச்சி
பணம் பெரிதில்லை அன்புதான் பெரிது என்று வாழும் அறுபது வயதுக்காரரையும் பணம்தான் பெரிது என்று வாழும் இருபது வயது இளைஞரையும் கதை நாயகர்களாக வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாடம் நடத்தியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கேபிஒய் பாலா இந்தப் படத்தில் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.அதற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கிறார்.காதல் மோதல்
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து நாட்டைச் சீரழிக்க ஒரு பெரிய குழு திட்டமிடுகிறது.சமுதாயத்தில் ஒரு சாதாரண இளைஞனாக இருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி முறியடிக்கிறார்? என்பதைச் சொல்வதுதான் மதராஸி. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோ எனச் சொல்லப்படும் சண்டை நாயகனாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.சண்டைக்
காவல்துறை அதிகாரியின் மகள் காணாமல் போகிறார்.அதேநேரம் ஒரு கொலை செய்ததாகச் சொல்லி ஓர் இளைஞர் சரணடைகிறார்.அதைப் பற்றி விசாரித்தால் அவர் கொலை செய்ததாகச் சொன்னவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்லவேண்டும்? என்கிற கேள்விக்கான விடையாக குற்றம் புதிது படம் இருக்கிறது. கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், அதற்கென பக்காவாக























