இலட்சிய உறுதி கொண்ட இளைஞர்களுக்கு, அவர்கள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்களோ? அந்தத் துறை ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அதுவே ஓர் இளம்பெண் அவ்விடத்தில் இருந்தால் துறை ரீதியான சிக்கல்களோடு பெண் என்பதாலும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். அந்த எதார்த்தத்தை
விமர்சனம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் செல்வராகவன், அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கிறார்.அதோடு நாளொன்றுக்கு ஒருவராக ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.அவரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டுவிட்டு அவர் செய்யும் கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால். அந்த முயற்சி பலித்ததா? செல்வராகவனை
தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு விதமான காதல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றிருக்கிறார் மெஸன்ஜர் படத்தின் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம் வெறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அந்தநேரத்தில் அவருடைய முகநூல் அரட்டை பகுதியில் தொடர்ந்து அவருக்கு குறுஞ்செய்தி வருகிறது.அதில், தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்
காதல் போயின் சாதலா… இன்னொரு காதல் இல்லையா… தாவணி போனால் சல்வார் உள்ளதடா… என்றார் வைரமுத்து. இந்தக் கருத்தை ஆமோதிக்கும் விதமாகச் சில படங்கள் வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து இன்னும் ஒருபடி மேலே போய் கதை சொல்லியிருக்கும் படம் ட்யூட். நாயகன் பிரதீப் ரங்கநாதனைக் காதலிப்பதாக அவருடைய மாமா மகள் நாயகி மமிதா பைஜு சொல்கிறார்.அதை நிராகரிக்கிறார் நாயகன்.சில கால இடைவெளியில்
தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களிலிருந்து இளைஞர்கள் முன்னேற்றமும் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் ஒன்று பைசன் காளமாடன் திரைப்படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தைக் கதைக்களமாகவும் தொண்ணூறுகளைக் கதைக் காலமாகவும் கொண்டு பிறர் உணவைத் திருடித் திண்ணும் சிறுவன் வெறியோடு உழைத்து இந்தியாவுக்கே பெருமை தேடித்தரும் இளைஞனாக மாறுவதுதான்
பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பக்கவிளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்? என்பதை எடுத்துக்காட்டும் படமாக வந்திருக்கிறது டீசல். வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட இராட்சத குழாய்களால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடியும் பலன் இல்லாததால், அதே
மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் நட்டியிடம் பல கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தைத் திருடும் வேலை ஒப்படைக்கப்படுகிறது.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் நட்டியிடமிருந்தும் அந்த வைரம் களவு போகிறது.கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல விழைந்திருக்கும் படம் கம்பி கட்ன கதை. கடமை தவறாத காவல்துறை அதிகாரி வேடமென்றாலும் சரி களவாணி வேடமென்றாலும் சரி
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் அறிமுகம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியானது.அனிருத் இசையமைத்திருக்கிறார். சிம்பு இரசிகர்களால் நிறைந்திருந்த திரையரங்குகளில் எடுத்தவுடன் தனுஷ் வந்தார்.ஆம்,வடசென்னை படத்தின் காட்சிகள் ஓரிரு நிமிடங்கள் திரையிடப்பட்டன.அதன் இறுதியில் தனுஷ் கீழே விழுவது போன்ற ஒரு காட்சியைத் தொடர்ந்து சிம்புவின் கால்கள் அழுத்தமான நடையுடன்
வீரத்தாலொரு வேடுவனாகி என்றொரு தேவாரப் பாடல் இருக்கிறது.வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். சினிமாவுக்குள் சினிமா என்பது பல்வேறு திரைப்படங்களில் வந்துவிட்டது.இப்போது வேடுவன் இணையத் தொடர் இதுபோன்ற கதையைத் தாங்கி வந்திருக்கிறது. நடிகர் கண்ணா ரவி இத்தொடரில் நடிகராகவே நடித்திருக்கிறார்.அவர் நடிக்கும் படமொன்றில்,இரகசிய போலீசாகப் பயணித்து முன்னாள் ரவுடி சஞ்சீவை
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து என்றார் திருவள்ளுவர். இந்தக் குறளுக்கு,பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி என்பது பொருள். அப்படி உலகத்தைத் தாங்கி நிற்கும் அச்சாணியாக இருக்கும் உழவர்கள் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை.கொண்டாடப்பட வேண்டிய அவர்கள் எப்படியெல்லாம்























