காதலே பிடிக்காத நாயகனுக்குக் காதல் வந்தால் என்ன ஆகும்? என்கிற கதையை வைத்து நிறையப் படங்கள் வந்துவிட்டன.இந்தப்படத்திலும் நாயகன் அப்படித்தான் என்பதோடு கூடுதலாக அவருக்கு ஒரு அளப்பரிய ஆற்றல் இருக்கிறதென்றும் அதனால் பல நிகழ்வுகள் நடக்கிறதென்றும் சேர்த்துக் கொடுத்து சுவை கூட்ட முயன்றிருக்கும் படம்
விமர்சனம்
காசு வாங்கினாலும் காரியத்த கச்சிதமா முடிச்சுக் கொடுத்துடுவாரு என்கிற சொல்லில் உள்ள அவலத்தை யாரும் உணர்வதே இல்லை. ஒரு செயலுக்குக் கையூட்டு வாங்குவதையும் கொடுப்பதையும் நியாயப்படுத்துகிற சொல் அது.அதை உணராமல் விதந்தோதுபவர்களை வைத்தே அந்த அவலத்தை அம்பலமேற்ற முயன்றிருக்கும் படம் சக்தித் திருமகன். தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி.பணமிருந்தால் எல்லா
இராமாயணத்தில் இடம்பெற்றது தண்டகாரண்யம்.தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்பதே அதன்பொருள்.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு உண்மையான தண்டனைக்குரியவர்கள் யார்? என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறது படம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா ஆகியோரோடு வசித்து வருகிறார். கலையரசன்
வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் என்றால் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வதுதான்.அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு,அவரைப் பற்றி இதுவரை மக்கள் கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் சுக்குநூறாக உடைப்பதென்பது அரிய நிகழ்வு. அந்த நிகழ்வை நிகழ்த்திக் காட்டியிருக்கும் படம் படையாண்ட மாவீரா. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உட்பட
மாயாஜாலக் கதைகளை வரலாற்றுப் பினபுலத்தோடு சொன்னால் அது காவியமாகிவிடும்.அந்த முயற்சியில் சமகாலம் மற்றும் வரலாற்றுக் காலம் ஆகியனவற்றைக் கதைக்களமாக கொண்டு வெளியாகியிருக்கும் படம் மிராய். பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய இரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீயசக்திகள் இந்த 9 புத்தகங்களைக் கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார்.பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்
காவல்துறையில் கடைநிலைக் காவலராகச் சேரும் நாயகன் அதர்வா,ரோந்துப் பணியின்போது ஒரு சந்தேக நபரை விசாரிக்க முற்படுகிறார்.அந்த நபர் தப்பித்து ஓடுகிறார்.அவரைத் துரத்திச் செல்லும் அதர்வா உள்ளிட்ட காவலர்கள் ஒரு பெரிய சிக்கலில் சிக்குகிறார்கள்.அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அந்தச் சிக்கல் என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் தணல். காவல்துறை வேடம் அதர்வாவுக்குப்
நீ ஒரு முறைதான் வாழ்கிறாய் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் You Only Live Once என்று வரும். இதில் வரும் நான்கு சொற்களின் முதலெழுத்துகளை மட்டும் வைத்து வைக்கப்பட்டிருக்கும் பெயர் தான் யோலோ. யோலோ என்ற பெயரில் வலையொளி நடத்துகிறார்கள் நாயகன் தேவும், நாயகி தேவிகாவும்.அதில் மற்றவர்களைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லி அதற்கான
ஒரு கிராமம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.அடிக்கடி மோதல்கள்.அதனால் அந்த மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் திடீரென இறந்து போகிறார்.அவருடைய மரணத்துக்குப் பின் ஓர் அதிசயம் நடக்கிறது.அதை வைத்து அந்த ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்த முயல்கிறார் நாயகன்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம்தான் பாம். இதுவரை பார்த்திராத
திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் கதாநாயகன்.அதனால் பல போராட்டங்கள்.அந்தப் போராட்டமெல்லாம் அந்தத் துறைக்குள் என்று நினைத்தால் அதுதான் இல்லை.அவர் வீட்டில் ஒரு மரணம் நடக்கிறது.அது கொலையாக இருக்கலாம் என்கிற ஐயம் காவல்துறைக்கு வருகிறது.காவல்துறையின் பார்வை நாயகன் பக்கமும் திரும்புகிறது.அதிலிருந்து தப்ப நாயகன் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன? அவர்
காயல் என்பது கடல் சார்ந்த இடம்.கடலையும் ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்து எழுத்தாளர் தமயந்தி எழுதி இயக்கியிருக்கும் படத்தின் பெயரும் காயல். கடல்சார் ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த்வர்.அவருக்கு உயர்சாதி நாயகி காயத்ரி மீது காதல்.வழக்கம் போல் அதற்கு எதிர்ப்பு.அதனால் நாயகி தற்கொலை செய்கிறார்.அதன்பின் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரின் நிலை





















