சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 22 ) அன்று வெளியானது. அப்போதிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு
செய்திகள்
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்து கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கொரோனாவால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக இன்று (ஆகஸ்ட் 22) அமேசான் இணையதளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி ‘சூரரைப் போற்று’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஏற்கெனவே, பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால் திரையரங்குக்காரர்களின்
இயற்கையாக உருவான பேரிடர் கொரானா வைரஸ். இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முடங்கின. இதன் காரணமாக அனைத்துத் தொழில்களும் தொடர்ந்து நடத்த இயலாமல்முடக்கப்பட்டது.திரைத்துறையும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்றானது. தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்புப் பாலமாக இருந்து கோடிக்கணக்கான
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ‘ஜகமே தந்திரம்’.இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே
விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்ததது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த
தெலுங்குத் திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் ராஜு. இவர் தயாரிப்பில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் தில்.அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தில்ராஜு என்றே அழைக்கப்பட்டார். இவர் தயாரிப்பில் ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பக்ட், பிடா, ஜானு உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் உருவாகியுள்ளன. இவற்றில் சில படங்கள் தமிழில் திரும்ப எடுக்கப்பட்டு
2014 ஆம் ஆண்டு வெளியான திருடன் போலிஸ், 2017 இல் வெளியான உள்குத்து உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கார்த்திக்ராஜு. இவர் கொரோனா ஊரடங்குக் காலத்தில் சத்தமின்றி ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளாராம். கதாநாயகியை மையப்படுத்திய ஒரு பேய்க்கதை என்பதால் மிகக்குறைந்த ஊழியர்களுடன் முப்பது நாட்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பையும் நடத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் இப்போது, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை





















