விஷால் நடித்திருக்கும் அயோக்யா படம் நேற்று ( மே 10) வெளியாகவேண்டியது. ஆனால் வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் மது, இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி படமெடுத்திருக்கிறார். ஆனால் இப்படத்தின் தென்னிந்திய உரிமையை மனீஷ் என்பவர் வாங்கியிருக்கிறார். அதனால் தமிழ் உரிமையை மட்டும் தனியாக
சினிமா
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திலும் இதே தயாரிப்பு நிறுவனம் இதே இயக்குநர்
நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கீ.காளீஸ் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 2016 ஆம் ஆண்டு நடுவில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தயாரித்திருப்பவர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்த
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் மது, இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி படமெடுத்திருக்கிறார். ஆனால் இப்படத்தின் தென்னிந்திய உரிமையை மனீஷ் என்பவர் வாங்கியிருக்கிறார். அதனால் தமிழ் உரிமையை மட்டும் தனியாக வாங்கியது தவறு, சட்டப்படி இப்படம் எனக்குத்தான் சொந்தம் என்று பஞ்சாயத்தைக்
விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியிருக்கும் கொலைகாரன் படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழரசன் உள்ளிட்ட ஓரிரு படங்கள் நடிக்கிறார். அவற்றின் படப்பிடிப்புகள் நிறைவடையவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்நிலையில் கொலைகாரன் படத்தைத் தயாரித்திருக்கும் பிரதீப் மற்றும் அப்படத்தை வெளியிடும் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து விஜய்ஆண்டனியோடு தொடர்ந்து சில படங்கள்
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் படம் 100. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். யோகி பாபு, ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் மே 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் மே 9-ம் தேதி (வியாழக்கிழமை)
மிஸ்டர் லோக்கல்,பெயரிடப்படாத ரவிகுமார் படம், ஹீரோ, ஆகிய படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது. அதன்பின்பு மே 6 ஆம் தேதியன்று, நாயகியாக அனுஇமானுவேல், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் இமான் என்பதை
இயக்குநர் மணிரத்னம் அடுத்து அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவிருக்கிறார். சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்போது அது நடக்கவிருக்கிறது. தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப்
புதிய இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கீ.2016 ஆம் ஆண்டு நடுவில் தொடங்கப்பட்ட இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தயாரித்திருப்பவர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்த அன்பானவன் அசராதவன்
ஏப்ரல் 19 அன்று ‘காஞ்சனா 3’ படம் வெளியானது. இந்தப் படம் கோடை விடுமுறை நாளில் வெளியானதால் மக்கள் கூட்டம் அலை மோதியது. . ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், ஒரே மாதிரியான பேய்க் கதை,பழைய நகைச்சுவைகள் என்று கிண்டலுக்கு ஆளானது. ஆனாலும் அவற்றைத் தாண்டி படத்தின் வசூல் பெரிதாக இருக்கிறது. இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் வசூலில் தயாரிப்பாளரின் பங்கு இதுவரை




















