மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’. இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதிராவ் மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி
சினிமா
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு, ஐதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. முதற்கட்டப் படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்களாம்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார். இதற்காகத் தன் உடலமைப்பை
ரஜினிகாந்தின் 167 வது படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். சந்திரமுகி, குசேலனைத் தொடர்ந்து ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார், இப்படம் 2020 ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
நேற்று திடீரென கலாநிதி மாறன் தனுஷ் ஆகியோரின் படங்களோடு, தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் தனுஷ் தவிர வேறு யார் பெயரும் இல்லை. குறிப்பாக இயக்குநர் பற்றிய அறிவிப்பு இல்லை. ஏன் இப்படி? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்…. தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கிய
ரஜினி நடிக்கும் தர்பார் படம் இன்னும் 25 நாட்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடக்கின்றன. ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்த கே.பி.ஃபிலிம்ஸ் பாலு பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார். வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறதாம்.
பணம்,புகழ் ஆகியனவற்றைச் சம்பாதிக்கும் களமாக திரைத்துறையைப் பார்ப்போர் மத்தியில் சமுதாய அக்கறையோடு படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சேரன். மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன், வெள்ளலூர் திரையரங்கத்தில் படம் ஓட்டுநராகப் பணி புரிந்தார். தாயார் கமலா தொடக்கப் பள்ளி ஆசிரியை. இவருடன்
தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 12.12.1950 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு இன்றோடு 69 வயது முடிவடைந்து 70 வயது தொடங்குகிறது. இதுவரை 167 படங்களில் நடித்து முடித்துவிட்ட ரஜினி 168 ஆவது படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். இந்த வயதிலும் ஒரு படத்துக்கு நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அவர்
ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற நிலையில் இன்னும் இப்படத்தின் வியாபார விசயத்தில் திடமான முடிவு எடுக்கப்படவில்லையாம். இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுகிறார்களாம். இப்படிப் பலர் போட்டியிடுவதால், தர்பார்
கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகவிருக்கும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இன்று தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு சுமார் நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு





















