February 12, 2025
செய்திக் குறிப்புகள்

மகன் துருவிற்கு விக்ரம் சொன்ன அறிவுரை

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழாக்கம் தான் இந்த ஆதித்ய வர்மா.

இதில்தான், துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கிரிசாயா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விழாவில் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில்,

ஆதித்ய வர்மா படப்பிடிப்புத் தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021 ஆம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் பேசுகையில்,

என் மகன் இப்படத்தின் இந்தி வெர்ஷனில் பணியாற்றினார், நான் தமிழில் பணியாற்றினேன். எங்கள் குடும்பத்திற்குள் இன்பம் நிறைந்த சவாலாக இருந்தது. படக்குழுவை பாராட்டியவர், நாயகன் துருவ்வின் நடிப்பு குறித்தும் பகிர்ந்துள்ளார். சவாலான பாத்திரத்தில் துருவ் நடித்த விதம் பிரமாதம் என்று கூறினார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில்,

நான் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன், ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ்த் திரைத் துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொன்னான வாய்ப்பளித்த நடிகர் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் மேத்தாவுக்கு நன்றி என்றார்.

மேலும் அவர் பேசும்போது, சில காட்சிகளைப் படமாக்கும்போது இரண்டு அல்லது மூன்று டேக்குகளுக்கு மேல் சென்றதற்காக துருவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். துருவின் முதல் டேக் எப்போதுமே சிறப்பாக இருந்தது. ஐ லவ் யூ துருவ்.

இசையமைப்பாளர் ரதன் பேசுகையில்,

என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர், ஆனால் நான் பச்சைத் தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்குக் காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்பக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே. ஒரு இரவு, நானும் எனது ஒலிப்பதிவாளரும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு மென்மையான குரல், ‘ஒரு கப் காபி வேண்டுமா?’ என்று அவரே கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்ரார்.

நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில்,

எஸ்ரா மூலம் மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி தெரிவித்தார். நான் இங்கிலிஷ் விங்லிஷ் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதேபோல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்தபோது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதைக் உணர்ந்தேன் என்று கூறினார். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது, மேலும் ஆதித்யா வர்மா மிகவும் புதியாக இருக்கும் என்றும் கூறினார்.

படத்தின் கதாநாயகி பனிதா பேசும்போது, உதவி இயக்குநர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.

இதுபோன்ற அற்புதமான வேலையைச் செய்ததற்காகவும் தனது இயக்குநர் கிரீசாயாவுக்கு நன்றி தெரிவித்தார். படத்தைத் தயாரிக்கும் போது நடிகர் விக்ரம் அளித்த மகத்தான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். “விக்ரம் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி” என்றார். தனது சக நடிகரான துருவைப் பற்றி பேசிய பனிதா, உங்களின் திரைப்பயணத்தின் துவக்கத்தில் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.

நாய்கன் துருவ் விக்ரம் பேசியதாவது….

நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உரைகளை வழங்கினேன், ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.

இந்தப் படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவளித்த தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும், இசையமைப்பாளர் ரதனுக்கும் நன்றி.

இயக்குநர் கிரீசாயா மற்றும் இணை இயக்குநர் ஆகியோரால் ஆரம்பத்திலிருந்தே இப்படம் திறன் வாய்ந்தோர் உள்ளங்கைகளில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டேன் .

அப்பாவைப் பற்றிச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தப் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும் என்றார் துருவ்.

விக்ரம் பேசுகையில்,துருவைப் போல பேச எனக்குத் தெரியாது. எனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ நான் ஒருபோதும் பதற்றத்தை உணரவில்லை,ஆனால் இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாகவே நான் பதற்றமாக இருக்கிறேன்.

தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, துருவைத் தேர்ந்தெடுத்ததற்கும் அவர் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி. துருவின் டப்ஸ்மாஷை பார்த்துத்தான், இந்தப் பாத்திரத்தில் நடிக்க துருவை கேட்டு என்னை அணுகினார்.

இயக்குநர் கிரீசாயா மற்றும் இணை இயக்குநர் ஷரியா ஆகியோர் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை.

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கும் நன்றி.நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு அறையைப் பகிர்ந்து தங்கியிருந்தோம். இன்று, அவர் இந்தியாவின் சிறந்த டி.ஓ.பிகளில் ஒருவர். எங்கள் கனவின் காரணமாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதைத்தான் நான் துருவிடம் சொன்னேன். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள் என்று சொன்னேன்.

கதாநாயகிகள் பனிதா மற்றும் பிரியாவுக்கும் நன்றி.அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றார் விக்ரம்.

Related Posts