செய்திக் குறிப்புகள்

விலங்கு வெற்றியால் இரசிகர்களுக்கு வாரண்ட் – குழுவினர் உற்சாகம்

விமல் நடித்த விலங்கு இணையத்தொடர் மற்றும் சூரி நடித்த மாமன் படம் ஆகியவற்றின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராகியிருக்கிறார்.

அவர், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இணையத் தொடர் வாரண்ட். இந்தத் தொடரின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ்,விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார்.விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.

சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் (Sivan Pictures, S Studios) சார்பில்,பிரசாந்த் பாண்டியராஜ்,பி.விஷால்,பி.எம்.ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.

வரும் 22 ஆம் தேதி முதல் ஜீ 5 (ZEE5) தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,இந்தத் தொடரின் முன்னோட்ட அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் மே 9 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

கதையின் நாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..,

புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம்.விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது.விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள்தான்.விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.இதில் நடிகராக மாறியுள்ளேன்.அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்.என் குடும்பத்திற்கு,எனது குழுவிற்கு,என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..,

நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும்தான்.நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ்.நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன்.ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார்.அதற்கு நன்றி.என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி.இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.இது என் முதல்படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

ஜீ 5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…

ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிடவேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.சமீபகாலங்களில் இரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது.ஆனால் அதன் உள்ளே பல கதைகளும்,பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம்.அது தனி உலகமாக மாறியது.2023-இலேயே இந்தக்கதையை உருவாக்க நினைத்தோம்.தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை.அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும்.‘விலங்கு 2’-இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’.ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல்முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும்,இது தனித்துவமான பயணமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…,

பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும்,கிண்டல் செய்தாலும் இரசிப்பான்.அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான்.மாமன் படத்திற்கு பிறகு வெப்சீரிஸ் செய்வதாகவும்,நடிப்பதாகவும் சொன்னான்.மகிழ்ச்சி என வாழ்த்தினேன்.நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன்,அந்தக்கதையை நான் நடிக்கிறேன் என்றான்.அவனிடம் தன்னம்பிக்கை அதிகம்.இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான்.அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன்.விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன்,நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன்,அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல இந்த சீரிஸ் வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.

நடிகர் கவின் பேசியதாவது…,

பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார்.அட்டகாசமாக இருந்தது.படம் என்று நினைத்துவிட்டேன்.கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன்.என் அஸிஸ்டெண்ட்கள் வளரவேண்டும்,அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார்.மகிழ்ச்சி.தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதேபோல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றிபெற வாழ்த்துகள்.நன்றி என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…,

பாண்டிராஜும் நானும் நல்லநண்பர்கள்.அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும்.நல்ல உழைப்பாளி.விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ்.மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக்குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…,

விலங்கு,கேம்,அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம்.இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல,சினிமாவை விட இது கடினமானது.படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன்.நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கியகாரணம்.ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்லகதைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை,ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள்.விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…,

தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த்.அவன் என் நண்பன்.இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

நடிகை கௌசல்யா பேசியதாவது..,

இந்த வெப்சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்யமுடிந்தது.எல்லோரும் ஒரேகுடும்பம் போல பழகினார்கள்.படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது.நான் நடித்திருந்தாலும் இன்னும் முழுகதையும் எனக்கு தெரியாது.அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை மீனா பேசியதாவது…..

ஜீ5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழுகுழுவிற்கும் நன்றி.பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்தசீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது.நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.இந்தக்கதையும்,அதன் காட்சிப்படுத்தலும் இரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் அருள்ஜோதி பேசியதாவது….

இது என்னுடைய முதல் வெப்சீரிஸ்.பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார்.இனிமேலும் அவரை ஹீரோவாக பலபடங்களில் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறோம்.இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரியதிரையிலும் பார்க்கவேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts