65 ஆவது தேசியவிருது பெற்ற சிறந்த தமிழ்ப்படம்
தென்மேற்கு பருவக்காற்று, ரெட்டச்சுழி, தாரை தப்பட்டை, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன்.எழுத்தாளராகவும் விளங்கும் இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’.
ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில், செழியனின் உதவியாளர் சந்தோஷும், நாட்டியக் கலைஞரான ஷீலாவும், தருண் என்ற சிறுவனும் நடித்துள்ளனர்.
பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், நாடகக் கலைஞர் ஆதிரா, எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2017 கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படம் இன்னும் மக்கள் பார்வைக்கு வரவில்லை.











