சினிமா செய்திகள்

இனி ராஜ்கிரண் வேண்டாம் – இயக்குநர் முத்தையா அதிரடி முடிவு

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா.

இந்தப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கொம்பன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. எனவே, இந்தப்படத்திலும் அவர்கள் இருவரையும் சேர்த்து நடிக்கவைத்திருக்கிறார் முத்தையா.

இப்படத்துக்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் முத்தையா. 
அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம். 

அந்தப்படத்திலும் ராஜ்கிரண் நடிக்கிற மாதிரி முக்கிய வேடம் ஒன்று இருக்கிறதாம். அதற்காக அவரிடம் பேசலாமா? என்று முத்தையாவிடம் கேட்டால் ராஜ்கிரண் வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம் முத்தையா.
ஏன் இப்படிச் சொல்கிறார்? என அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அதற்கு அவர் சொன்ன காரணம், ராஜ்கிரண் சார் இப்போதெல்லாம் சொல்லிக் கொடுக்கும் வசனங்களை மறந்துவிடுகிறார். மாற்றி மாற்றிப் பேசுகிறார் எனவே இனி அவரை வைத்துப் படப்பிடிப்பு நடத்துவது கஷ்டம், ஆகவே அவர் வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம் முத்தையா.

அதோடு, அந்த முக்கிய வேடத்தில் நடிக்க  மலையாள நடிகர் மம்முட்டியைக் கேட்டிருக்கிறார்களாம். இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்கிறார்கள்.

சரியாக அமைந்தால் முத்தையா இயக்கும் அடுத்தபடத்தில் ஆர்யா மம்முட்டி ஆகியோர் இணைந்து நடிப்பார்களாம். 

Related Posts