ஜெய் மற்றும் அதுல்யாவின் பங்களிப்புக்கு நன்றி – எண்ணித்துணிக தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

ரெய்ன் ஆஃப் ஆரோ எண்டர்டெயின்மெண்ட் (Rain of Arrow Entertainment) சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில்,ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் “எண்ணித் துணிக”.
இத்திரைப்படத்தில், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார், ஜே.பி. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்,வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 23 அன்று, படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது..,
இந்தப் படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இந்தப் படம் பார்ப்பவரை சீட் நுனிக்குக் கூட்டிவரும். நான் மகிழ்ச்சியுடன் இந்தப் படம் செய்துள்ளேன். இந்தப்படம் எனக்குப் பெரிய அனுபவமாக இருந்தது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஜெய் மற்றும் அதுல்யா இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தில் இரண்டு காதல் பாடல்கள் இருக்கின்றன. பாடல்வரிகள் சிறப்பாக வந்துள்ளன என்றார்.
நாயகி அதுல்யா பேசியதாவது..,
இந்தப் படம் இயக்குநர் வெற்றி உடைய கடின உழைப்பால் ஆனது. நடிகர் ஜெய் உடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
நாயகன் ஜெய் பேசியதாவது..,
இந்தப் படத்தின் பெரிய பலம் இசை தான். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்தப் படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்தப் படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்தப் படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழுக் காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்ப்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள். நன்றி என்றார்.
இயக்குநர் வெற்றிச் செல்வன் பேசியதாவது..,
தமிழ்மொழிக்கு எனது முதல் நன்றியைக் கூறிகொள்கிறேன். இந்தப் படத்தை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பொருந்தும். இசையமைப்பாளர் சாமுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றியது சந்தோசம். எனது நண்பன் இந்தப் படத்தில் எடிட்டராக பணிபுரிந்தது மகிழ்ச்சி. அதுல்யா பெரிய உழைப்பைத் தந்துள்ளார். நடிகர் ஜெய் இந்தப் படத்திற்கு பெரிய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுத்தார். படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
பாடலசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,
பெரிய போராட்டங்களைக் கடந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் எல்லாப் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் சாம் சி எஸ்- க்கு எனது நன்றிகள். தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி என்றார்.
நடிகர் மிர்ச்சி சிவா பேசியதாவது..,
இயக்குநர் என்னைத் தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்குப் போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார். ஜெய் மிகவும் அர்ப்பணிப்பான நடிகர். ஜெய் மிகப்பெரிய உயரத்தை அடைவார் அவருக்கு எனது வாழ்த்துகள். இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினர். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் பேசியதாவது….
இயக்குநர் வெற்றியைப் பார்த்த போதிலிருந்தே அவர் திறமை மிக்கவர் என எனக்குத் தெரியும். இந்தப் படத்திற்கு ஜெய்யும், அதுல்யாவும் கொடுத்த பங்களிப்பு மிகப்பெரியது. அதற்கு நன்றியைக் கூறிகொள்கிறேன். தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்திற்குப் பெரிய பலம். கண்டிப்பாக இந்தத் திரைப்படம் உங்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் நன்றி என்றார்.
க்ரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் பேசியதாவது……
இப்படம் மிக அற்புதமாக வந்துள்ளது. வெற்றி மிக நல்ல ஒரு படத்தைத் தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி. தமிழகத்தில் பெரிய எண்ணிகையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.