வெகுமக்கள் கவனத்தில் வராத மாந்தர்களைப் பற்றிய கவன ஈர்ப்பு பாலாவின் படங்களில் இருக்கும்.வணங்கான் படம் மாற்றுத்திறனாளிகளின் வலியைப் பேசுகிற படமாக வந்திருக்கிறது. கன்னியாகுமரியில் வசிக்கும் நாயகன் அருண்விஜய், காதுகேட்காத வாய்பேச முடியாதவர்.கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு தங்கை ரிதாவுடன் வசித்து
இவ்வாண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலையொட்டி ஏழு திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாலா இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வணங்கான்,சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் மதகஜராஜா,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் கேம்சேஞ்சர்,கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் காதலிக்க
1999 ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ்த் திரையுலகின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 18 அன்று, முன்னணி நடிகர்கள்,
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொள்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து
தமிழ்த் திரையுலகில் இம்மாதம் அதாவது ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 26 அன்று ராயன் படம் வெளியாகவிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து அடுத்த பெரிய வெளியீட்டுத் தேதி என்றால் அது ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான். அந்த நாளில் அல்லுஅர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வெளியாகவிருந்தது.அப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் அந்தத் தேதியில் பல படங்கள்
தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன். தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
நடிகராக அறியப்பட்ட அருவிமதன் இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கியுள்ள படம் நூடுல்ஸ். ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப்படத்தை அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கூறியிருப்பதாவது…. நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய
நடிகர் அருண்விஜய் நடிப்பில் தற்போது மிஷன் சாப்டர் 1 என்கிற படம் தயாராக உள்ளது. இந்தப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாலா இயக்கும் வணங்கான் படம் இருக்கிறது. அந்தப்படம் பாதிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. மீதிப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. இவற்றிற்கடுத்து அருண்விஜய் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை இல்லை. அதேசமயம், மூன்று
பாலா இயக்கும் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார் என்பதோடு அப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் சூர்யா விலகிக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பரபரப்பான செய்தி. என்ன நடந்தது? நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது எனும் பேச்சு தொடங்கியபோது, இப்படத்தில் உனக்கு மீனவர் கதாபாத்திரம் என்பதோடு காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி என்று
நடிகர் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் பாதியில் நின்றிருந்த பாலா இயக்கும் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 4 ஆம் தேதி மாலை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர்




















