அமைதிப்படை-2, கங்காரு ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின்
சனவரி 10,2019 அன்று ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜீத் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. வெளியான நாள் முதல் இவ்விரு படங்களுக்கிடையே எந்தப்படம் அதிக வசூல் செய்தது? என்கிற விவாதங்கள் காரசாரமாக நடந்துவந்தன. பேட்ட 100 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் சொன்னது. உடனே விஸ்வாசம் 125 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத்தை வெளியிட்ட நிறுவனம் சொன்னது.
பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அந்தப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே லைகா தயாரிப்பில் 2.ஓ படத்தில் ரஜினி நடித்திருந்தார். அந்தப்படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தைத் தொடர்ந்து சேரன் எழுதி இயக்கிருக்கும் படம் திருமணம். நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தேதிகள் ஒதுக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் வேடம் பற்றியும்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் சனவரி 10, 2019 அன்று திரைக்கு வந்தன. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் சனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தள்ளது. இந்தப்படத்துக்கு ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண்
2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி நாளை (சனவரி 10,2019) திரைக்கு வருகிறது. இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 1090 திரையரங்குகளை இரு படங்களும் பகிர்வதால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஏதேனும் ஒரு படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்கும்படியும் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில்




















