விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். நேற்று மாலை 5 மணிக்கு அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அப்படத்தைத் தயாரிக்கவிருக்கும் சேவியர் பிரிட்டோ அறிவித்தார்.
‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் விஜய்
விஜய் இப்போது பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதற்குப் பிறகு மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 65 ஆவது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல்ல லாபம் பார்த்தன. இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய
சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) மாலை 6 மணிக்கு வெளியானது. தளபதி 64
‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. இந்தப் படத்தில் கதாநாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நரேன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் வெளிவருமுன்பே இப்பட இயக்குநர் லோகேஷ்
விஜய் இப்போது அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. விஜய்யின் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர்
ஸ்ரீ, சுதீப் கிஷன், ரெஜினா உட்பட பலர் நடிப்பில் வெளியான மாநகரம் படத்தை இயக்கியவர் புதுமுகம் லோகேஷ் கனகராஜ். 2017 இல் வெளியான அந்தப்படம் நல்ல வரவேறபையும் வசூலையும் பெற்றது. அதன் காரணமாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்கனகராஜை அழைத்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் கதாநாயகியே இல்லாமல் உருவாகும் அந்தப்படத்தின் பெயர் கைதி.


















