அறிமுக இயக்குநர் கார்த்திக்யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தயாராகி வருகிற படம் டிக்கிலோனா. இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் இளையராஜா நடத்திய என்னுள்ளில் எம்,எஸ்.வி எனும் இசை நிகழ்ச்சி நடந்தது. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ்பாடும் நிகழ்ச்சி அது. ஐந்தாண்டுகளுக்குப் பின் கொரொனா ஊரடங்கு காரணமாக அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதைப்பார்த்துவிட்டு இதழாளர் சங்கர் எழுதியிருக்கும் பதிவு…..
இசைஞானி இளையராஜா 45 வருடங்களுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடக்கத்தில் ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் இசைப் பணிகளை மேற்கொண்ட அவர் பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை மாற்றினார்.அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இசைக் கூடத்தை காலி
காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்
நவம்பர் ஏழாம் தேதி நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள். அதோடு அவர் திரைத்துறைக்கு வந்து அறுபது ஆண்டுகள் ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் (1960) வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன. கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு
இயக்குநர் சீனுராமசாமி விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் மாமனிதன். இப்படத்தில் இளையராஜாவும் யுவனும் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும்படி சீனுராமசாமி இளையராஜாவிடம் கேட்டதாகவும் அதனால் அவர் சீனுராமசாமி மீது கோபமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அது தொடர்பாக சீனுராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. என் நெஞ்சம் நிறைந்த தமிழ்
அவ்வப்போது ஏதாவது கருத்துகளைச் சொல்லி சர்ச்சையில் சிக்குவார் இளையராஜா. அண்மையில் அவர் அளித்த காணொலி நேர்காணல் ஒன்றில், விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியது தவறான விசயம் என்றும், எண்பதுகளில் நடக்கிற கதையாக இருந்தாலும் சொந்தமாகப் பாடல் போட்டிருக்கவேண்டும் அந்த இசையமைப்பாளருக்கு அந்த ஆண்மை இல்லை என்றும்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா பிப்ரவரி 2,3 ஆகிய நாட்களில் இரண்டு நாள் விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது… இளையராஜா எனக்கு இன்னொரு அண்ணன். இறந்துபோய்விட்ட என் அண்ணன் (சந்திரஹாசன்),
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா, பிப்ரவரி 2,2019 அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்த் திரையுலகம் மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர்


















