நயன்தாரா நடித்த அறம்,ஐரா பிரபுதேவா நடித்த குலேபகாவலி,விஜய்சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம்,சந்தானம் நடித்த டிக்கிலோனா,பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ,டாக்டர்,அயலான் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கே.ஜே.ஆர் என்று சொல்லப்படும் கொட்டப்பாடி ஜே ராஜேஷ். அயலான் திரைப்படம்
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவரும் ‘அயலான்’ படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார் கருணாகரன். நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட
1997 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டிக்கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலாகபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவை அவரை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான்.ரஜினி, விஜய், அஜீத்,சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியொரின் படங்களில் நகைச்சுவை வேடத்துக்கு அவர் இருந்தால்தான் நல்லது என்று அவருடைய தேதிகளில் சிக்கல்
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு. இவர்களில் அதிதி இப்போது நடிகையாகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி. தன் வாரிசுகளை திரைத்துறையில் விடக்கூடாது என்பது இயக்குநர் ஷங்கரின் எண்ணம் என்பார்கள். ஆனால் வாரிசுகள் அப்படி இல்லை. அவர்களுக்கு இருந்த ஆர்வம்
விட்டுவிட்டு நடித்தாலும் விடாமல் நடித்துக் கொண்டிருப்பவர் விக்னேஷ். திரைப்படம் தாண்டி தொழில்முனைவோராக இருந்தாலும் திரைப்படத்துறையை விட்டுப் போகாமல் தொடர்கிறார். அண்மையில் அவர் குணச்சித்திர வேடமேற்ற ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது. இப்போது தமிழர்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் பாசக்கார பய படம் வெளியாகவிருக்கிறது. அதையொட்டி
2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சதீஷ். நகைச்சுவை வேடங்களில் நடித்து அவருக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததால் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர். அவர் இப்போது கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம். அவரைக் கதாநாயகனாக வைத்து இணையதளத்
ரஜினி,கமல், விஜய்,அஜீத், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் நிரம்பி வழியும். அதுபோலவே இவர்கள் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரத்திலும் பெரும்பாலான மக்கள் பார்த்து ரசிப்பார்கள். அதுவும் முதன்முறை அப்படம் ஒளிபரப்பாகிறதென்றால் கேட்கவே வேண்டாம். மக்கள் எல்லாம் அப்படத்தைத் தான் பார்ப்பார்கள்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 டிசம்பர் 20 அன்று வெளியான படம் ஹீரோ. இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு. இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் என்றும் கூறினார். இதையடுத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனை,
இரண்டு மாதங்களுக்கு முன்பாக, கோயம்புத்தூரில் இருந்த சமயத்தில் முன்னறியா எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு இரண்டு மூன்று நாட்களாக அடிக்கடி தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. ஜான்சுந்தர் அண்ணனின் ‘டமருகம்’ சார்ந்த வேலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம். புதுநண்பர்களைச் சந்திப்பதற்கான தகுந்த மனநிலை அமையாததாலும், சினிமா சார்ந்த தோழர்களை எதிர்கொள்வதில் ஒருசில
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் கே.பாக்யராஜ் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு 16.12.2019 தேதியிட்டு எழுதிய கடிதம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதன் விவரம்…. 16.12.2019 தேதியில் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதத்தில்



















