அறிமுக இயக்குநர் என்.அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் டே நியூ மாங்க் பிக்சர்ஸ்(New Monk Pictures) சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கிறார். திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் எளிய ஊழியன்,இக்கட்டான நிலையில்,தன் மேனேஜர்
பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன் அன்பாகப் பழகுகிறார்.இவருக்குப் பணிவிடை செய்கிறார்.ஏராளமான விசயங்களைப் பேசுகிறார்.அவர் யாரென்றே இவருக்குத் தெரியவில்லை.அவர் யார்? என்கிற கேள்விக்கு விடையாக விரிந்திருப்பதுதான் மெய்யழகன்.
அசோக் செல்வன்,சாந்தனு,கீர்த்தி பாண்டியன்,ப்ருத்வி,பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி,அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித், லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா
மீண்டும் ஒரு வடசென்னைப்படம். நல்லதற்கும் கெட்டதற்கும் சமவாய்ப்புகள் உள்ள வாழ்நிலம். வளரும் தலைமுறை அடிதடி, போதை ஆகியனவற்றிற்கு ஆட்பட்டுவிடாமல் விளையாட்டு, வேலைவாய்ப்பு என்று மாற்ற நினைக்கிறார் ஒருவர். அவர் சிந்தனையில் ஈர்க்கப்படுகிறார் நாயகன்.இருவரும் விரும்பியபடி நடந்ததா? இல்லையா? என்ன நடக்கிறது? என்பதை விலாவாரியாகச் சொல்லியிருக்கும் படம் ஃபைட்கிளப். நாயகனாக
கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இரண்டுநாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது கார்த்தி, நலன்குமாரசாமி இயக்கும் புதியபடத்தில் நடித்திருக்கிறார்.ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவர் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இந்த வாரம்
எங்கள் மண் எங்களுக்கே எனும் மண்ணுரிமைப்போராட்டத்தை மையப்படுத்தி கன்னடத்தில் வெளியான காந்தாரா மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அதற்கு இணையாக மலையாளத்தில் வெளியாகி வரவேற்புப் பெற்றிருக்கும் படம் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருக்கும் படவெட்டு. தொப்பையும் தொந்தியுமாய் இருப்பதோடு எப்போதும் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. கேரளாவின் கண்ணூர்
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கப் பெண்மணி, அரசதிகாரம், அரக்கர்களெனத் தோரும் ஊடகத்துறை, திடீரென முளைத்த கொலைவெறி கொண்ட எதிரிகள் மற்றும் உறவுகள் ஆகியனவற்றுக்கெதிராகப் போராடுவதை மிக மிக எதார்த்தமாகச் சொல்லியிருக்கும் படம்தான் கார்கி. பள்ளி ஆசிரியையான சாய்பல்லவிக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணக் கனவுகளுடன் இருக்கும் அவர் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் எதிர்பாராத நிகழ்வு மொத்த
காவல்துறை சொல்லும் குற்றச்சாட்டுகள் அதன் மீதான நடவடிக்கைகள் ஆகியன அனைத்தும் எல்லா நேரங்களிலும் அப்படியே உண்மையாகிவிடாது என்பதை ஓங்கிச் சொல்லியிருக்கிறது பொன்மகள் வந்தாள். காவல்துறையால் இட்டுக்கட்டிப் புனையப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கை 15 ஆண்டுகளுக்குப் பின் தோண்டியெடுக்கிறார் வழக்குரைஞர் வெண்பா ( ஜோதிகா ). அவருக்கு உறுதுணையாக டிராபிக்ராமசாமி போல
தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதிதிராவ் ஹெய்தாரி நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும்
ஸடெர்லைட் போன்றதொரு நாசகார ஆலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்து போய் ஏராளமானோர் ஊனமாகின்றனர். அந்த ஆலையிலேயே பணியாற்றிய நாயகனும் அவருடைய நண்பர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதுதான் உறியடி 2. நாயகன் விஜயகுமார், தொடக்கத்தில் ஒரு சாதாரண வீட்டுப் பையனாக வந்து போகப்போக பெரும் புரட்சிக்காரராக மாறுகிறார். அவருடைய வேடம் வலிமையானது.அதற்குப் பொருத்தமான நடிப்பை





















