எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்,சொந்தத் தயாரிப்பில் பாலா
சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆயுதபூசைக்குப் பிறகு தொடங்கி அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. அவர் இப்போது,கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன்
இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தின் நாயகன் அதர்வாவா? சூர்யாவா? என பட்டிமன்றம் நடக்காத குறையாக மாற்றிச் மாற்றிச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான உறுதியான விடை, பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் சூர்யா. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவன் இவன்’. ஆர்யா, விஷால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து ஐயனார் கோயில் பற்றியும் அவதூறாகச் சித்திரித்து இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிங்கம்பட்டி ஜமீன், மறைந்த முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜென் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
பிக்பாஸ் 4 இல் ஆரியின் வெற்றியைக் கடவுளாலும் தடுக்க முடியாது. இது ஓர் ஆரி ஆதரவாளனின் பதிவல்ல. நார்வே நாட்டில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவதானிக்கும் ஓர் ஈழத் தமிழனின் பதிவு. பிக்பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆரியே வெற்றியாளர் என்பது மக்கள் கணிப்பாக இருக்கிறது. கடைசி நேரத் திருப்பம் ஏதும் நடந்து விடுமா?
விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் அடுத்த படம் என்ன என்பது பற்றி இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. அடுத்து அவர் உதயநிதியை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்றும் உதயநிதி மற்றும் அதர்வா ஆகிய இருவரையும் நாயகர்களாக வைத்துப் படம் எடுக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், உதயநிதி, அதர்வா, ஜீ.வி.பிரகாஷ் ஆகிய
உதயநிதி ஸ்டாலின் இப்போது கண்ணை நம்பாதே உட்பட சில படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அவற்றோடு நவம்பர் மாத தொடக்கத்தில் மகிழ்திருமேனி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் ஏற்கெனவே பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால் அதன்பின் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும்
அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு ஒரிஜினலின் ரீமேக். விக்ரம் மகன் துருவ் அறிமுகம், பாலா இயக்கம் என்றெல்லாம் எதிர்பார்ப்புடன் இருந்து ட்ரெய்லர் ரிலீசிலே கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. படம் வரவேயில்லை. இந்திய சினிமா சரித்திரத்தில் படம் நன்றாக இல்லையென்று தயாரிப்பாளரே சொல்லி ரிலீசாகாமல் செய்ததெல்லாம் வரலாறு. பின்பு ஒரிஜினலில் இணை இயக்குநராய் பணி புரிந்த ஒருவரால் ஆதித்ய வர்மாவாக வந்தது.
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மொழிமாற்றாக உருவான படம் வர்மா. விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான அந்தப்படத்தை பாலா இயக்கினார்.அந்தப் படம் முழுமையாகத் தயாரானாலும், அதன் இறுதி வடிவம் திருப்தி தரவில்லை என்று சொல்லி கைவிட்டுவிட்டார்கள். தமிழ்த் திரையுலகில் ஒரு படம் முழுமையாகத் தயாராகி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இதுதான்



















