உதயநிதி ஸ்டாலின் இப்போது கண்ணை நம்பாதே உட்பட சில படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அவற்றோடு நவம்பர் மாத தொடக்கத்தில் மகிழ்திருமேனி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் ஏற்கெனவே பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன.
நடிகர் அதர்வா முரளி மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்புத் துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால்
விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று (மார்ச் 15) மாலை சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. அவ்விழாவுக்கு ஊடகங்களுக்கும் விருந்தினர்களுக்கும் அழைப்பில்லை, படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா கலந்து கொண்டிருந்தார். அவர்
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் வெவ்வேறு
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் படம் 100. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். யோகி பாபு, ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் மே 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் மே 9-ம் தேதி (வியாழக்கிழமை)
விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றிய பெருமைகளையும் தற்காலத்தில் அவர்கள் படும் இன்னல்களையும் பேசுகிற படங்கள் நிறைய வரத்தொடங்கியிருக்கின்றன. சிக்கல்களை மட்டும் சொல்லாமல் அதற்கு ஒரு தீர்வையும் சொல்ல வந்திருக்கிறது பூமராங். கால்பந்து விளையாட்டு வீரரான சிவா, தீ விபத்தொன்றில் சிக்குகிறார்.அவர் முகம் முழுக்க எரிந்து போய்விட, முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய முகம்
இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில்,இயக்குநர் ஆர்.கண்ணன்,
எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் வெளியீட்டுக்குத் தயாராவதில் பொருளாதார ரீதியாக
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா உட்பட பலர் நடித்த இமைக்கா நொடிகள் படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு மட்டுமல்ல நல்ல வசூலும் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லி, ஊடகங்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு
பெங்களூரு நகரத்தில் வரிசையாகக் கொலைகள் நடக்கின்றன. அதை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் அதிகாரி அஞ்சலி விசாரிக்கிறார். அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள்தாம் படம். சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா, தொடக்கத்திலிருந்து அந்த வேடத்துக்குரிய மிடுக்குடன் வலம்வருகிறார். ஆனால், வரிசையாகச் சொல்லியடிக்கிற கொலைகாரனை நெருங்க முடியாமல் திணறுகிறார். இது



















