பெங்களூரு நகரத்தில் வரிசையாகக் கொலைகள் நடக்கின்றன. அதை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் அதிகாரி அஞ்சலி விசாரிக்கிறார். அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள்தாம் படம். சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா, தொடக்கத்திலிருந்து அந்த வேடத்துக்குரிய மிடுக்குடன் வலம்வருகிறார்.
அதர்வா தயாரித்து நடித்திருக்கும் செம போத ஆகாத படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்த அவர் நடித்திருக்கும் இமைக்கா நொடிகள் பட வேலைகளும் முடிவடைந்துவிட்டனவாம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதர்வா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ஒத்தைக்கு ஒத்தை. இந்தப்படம் பாதியளவு படப்பிடிப்பு நடந்ததோடு நிற்கிறதாம். அதர்வா படங்களுக்கு வியாபாரம் இல்லை என்பது மட்டுமின்றி எதிர்பார்ப்பும் இல்லை
2010 ஆம் ஆண்டு வெளியான பாணாகாத்தாடி படம் மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு எட்டுப்படங்கள் நடித்திருந்தாலும், இதுவரை ஒரு பெரிய வெற்றியை அடையவில்லை. ஆனாலும் அவருக்குப் படங்களுக்குக் குறைவில்லை. அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘பூமராங்’, ‘100’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் செம போத ஆகாத திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ‘100’














