கல்லூரி மாணவரான தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார். எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும்,அவரை நல்ல மனிதனாக மாற்ற முடியும் என முனைவர் பட்ட ஆய்வறிக்கை கொடுக்கிறார் நாயகி கீர்த்தி சனோன். வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும்
ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். தனுஷ் நடிப்பில் மூன்றாவது இந்திப்படம் தயாராகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இவர் தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனாவை இயக்கியவர். அட்ராங்கி ரே என்று பெயர்














