சினிமா செய்திகள் நடிகர்

ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன், அந்தப் பகுதி சிம்பு ரசிகர் மன்றத் தலைவர்.

கடந்த வாரம் நடந்த நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு மதனும், அவரது நண்பர் தீபக்கும் சேர்ந்து, வல்லவன் ஃப்ரண்ட்ஸ் & பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். அதனால் சிக்கல் வந்ததாம்.

அதனால் பேனர் வைத்த மதனையும் தீபக்கையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். இந்த தாக்குதலில் மதன் பலியானார்.

சிம்புவின் ரசிகர் மன்ற தலைவர் மதன் என்பதால், அவருடைய குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் டி.ராஜேந்தர்.

மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய சிம்பு, மதன் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னதோடு, மதனுக்கான கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளை அவரே ஒட்டினார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் நெகிழ்ந்திருக்கின்றனர்.

Related Posts