சினிமா செய்திகள்

கழற்றிவிட்ட லிங்குசாமி கதறும் ஜெயமோகன்

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான படம் தி வாரியர்.இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அது.தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வெளியானது.

அதற்குப்பின் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது.அது தொடங்கவில்லை.முதலில் பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பார் என்றார்கள், அதன்பின் ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.அதுவும் சரியாக வரவில்லை என்ற பிறகு தற்போது நடிகராக அறிமுகமாகியிருக்கும் அதர்வா தம்பி ஆகாஷை வைத்து பையா 2 எடுக்கப்போவதாகச் சொன்னார்கள். அதிலும் முன்னேற்றமில்லை.

இப்போது அவர் மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைக்கதை எழுதி அதைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அக்கதையில் வரும் ஓரிரு கதாபாத்திரத்திங்களை முன்னிலைப் படுத்தி திரைக்கதை எழுத முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக எழுத்தாளர் ஜெயமோகனை அணுகிய லிங்குசாமி, தேவையை விவரித்து திரைக்கதை எழுதித் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

ஜெயமோகனும் அதை ஏற்றுக்கொண்டு எழுதியிருக்கிறார்.

முழுமையாக எழுதிவிட்டதாகச் சொல்லி ஜெயமோகன் கொடுத்த திரைக்கதையைப் படித்துப் பார்த்த லிங்குசாமிக்கு அதில் நிறைவில்லையாம்.

அவருடைய நெருங்கிய நண்பர்களும் படித்திருக்கின்றனர். அவர்களுக்கும் திருப்தியில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் மீண்டும் ஜெயமோகனை அழைத்து, என்னென்ன தேவைகள் என்பதை விளக்கி மாற்றி எழுதித் தரச் சொன்னார்களாம்.

அவர்கள் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, என்னுடைய வெண்முரசு படியுங்கள், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாகவே அதில் எழுதியிருக்கிறேன்.அவற்றில் உங்களுக்கு என்னென்ன தேவையோ அவ்வளவையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

ஜெயமோகனின் இந்தப் பதிலைக் கேட்டு லிங்குசாமி மற்றும் அவரது தரப்பினருக்குக் கடும் அதிர்ச்சி.

ஒருமுறை எழுதியதைத் தாண்டி மறுபடி எழுத மாட்டேன் என்று அவர் சொல்வார் என்பதைச் சற்றும் எதிர்பாராததால் வந்த அதிர்ச்சி அது என்கிறார்கள்.

இதனால் ஓர் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் லிங்குசாமி.

ஜெயமோகனுக்கு ஒரு பெரும் தொகையை முன் பணமாகக் கொடுத்திருந்த போதிலும் அது அப்படியே போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு இப்போது தெலுங்கில் பிரபலமான எழுத்தாளராக இருக்கும் சாய் மாதவ் புரா வை, மகாபாரதம் படத்துக்குத் திரைக்கதை எழுத ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

ஒரு வாரம் அவரோடு வடக்கே சென்று விவாதம் நடத்திவிட்டு திருப்தியுடன் திரும்பியிருக்கிறார் லிங்குசாமி.

மகாபாரதத்துக்கு நான் தான் முழு உரிமை உடையவன் எப்படியிருந்தாலும் என்னிடம்தான் வந்தாக வேண்டும் என்கிற திமிரோடு சுற்றிக் கொண்டிருந்த ஜெயமோகனுக்கு, சாய் மாதவ் புரா உள்ளே வந்தது பேரரதிர்ச்சி.

இது பற்றிப் போவோர் வருவோரிடமெல்லாம்,நான் நன்றாகத்தான் எழுதினேன் வேண்டுமென்றே என்னைக் கழற்றி விட்டுவிட்டார் லிங்குசாமி என்று கதறிக் கொண்டிருக்கிறாராம் ஜெயமோகன்.

Related Posts