ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2 ஓ திரைப்படம் இவ்வாண்டு சனவரியில் வெளியாகும் என்றும் அதன்பின் ஏப்ரலில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். அதற்குப் பதிலாக காலா வெளியானது. 2018 ஆகஸ்ட் அல்லது இவ்வாண்டு
செய்திகள்
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் களவாணி. இயக்குநர் சற்குணத்தின் முதல்படம். விமல், ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்த படம். எட்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்குகிறார். அதே விமல் ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்பார்வையை ஜூன் 30 அன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் மாதவன். அது வெளியான சில
கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் அறம். அந்தப்படம் வெற்றி பெற்றதோடு அதுபற்றிய பரவலான விவாதங்களையும் உருவாக்கியது. அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய படம் என்பதால் அதற்கு அவ்வளவு வரவேற்பு. இக்காலத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநரை பெரிய கதாநாயகர்கள் தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்கள் சுற்றி வளைப்பார்கள்.
இயக்கம் நடிப்பு ஆகிய இரண்டு குதிரைகளிலும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் சுந்தர்.சி. கலகலப்பு 2 படத்தை இயக்கிய பிறகு பெரிய பொருட்செலவில் பிரமாண்ட படம் ஒன்றை அவர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர் அசரவில்லை. தொட்டிஜெயா முகவரி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய துரை இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். சுந்தர் சி க்கு
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23 முதல் இலண்டனில் நடந்துவருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப்படத்தின்
சற்குணம் இயக்கத்தில் விமல் , ஓவியா உள்ளிட்ட பலர் நடிக்கும் களவாணி2 படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி நடிகர் மாதவன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாலை ஆறு மணிக்கு முதல் பார்வையை வெளியிட்டார். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இணையப்பக்கங்கள் மற்றும் சமூக
உதயநிதிஸ்டாலின் இப்போது சீனுராமசாமி இயக்கியிருக்கும் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன், அட்லியிடம் பணியாற்றிய ஈனோக் ஆகியோருடைய இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது உதயநிதி புதிய கூட்டணி அமைத்திருக்கிறாராம். துப்பறிவாளன் படத்துக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில்
டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இப்போது இயக்கியிருக்கும் படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராக்ஷிகண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, இந்தப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? என்கிற கேள்வி எல்லோருக்கும்
புதுமுக இயக்குநர் சீயோன் எழுதி இயக்கிருக்கும் படம் பொதுநலன்கருதி. பணக்கார வர்க்கத்துக்கும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கும் நடக்கும் பிரச்சினைகளே இந்தப்படம் என்றும்,சூழ்நிலைக் கைதிகளாய் மாறி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் இளைஞர்களின் கதை இது என்றும் கூறுகிறார்கள். அண்மையில், பாளையங்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து – சுப்புலட்சுமி மற்றும்
வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இப்போது ஜி.வி.பிரகாஷ் கைநிறையப் படங்களோடு வெற்றிகரமாக உலா வருகிறார். வசந்தபாலனுக்குப் பட வாய்ப்புகள் இல்லை. எனவே தன்னை அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடனாக அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க தேதி கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ். ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கும் அப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு





















