துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி
சினிமா
நடிகர் பார்த்திபன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் சிம்பு தொடர்பான கேள்விக்கு ‘அவர் ஒரு சுயம்பு’ என்று பாராட்டிப் பேசியிருந்தார். உடனே, பார்த்திபனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய இல்லத்துக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் அனுப்பி வைத்துள்ளார் சிம்பு. இது தொடர்பாக பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததாவது….. ‘சுயம்பு’ சிம்பு பற்றி
தென்னிந்திய மொழிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார்.முதல் மூன்று பாகங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 4 ஆம் பாகம் தொடங்கும் முன்னேற்பாடுகள் கொரோனாவால் தடைபட்டது. இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி
மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்ததது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் படப்பிடிப்புத் தளத்தில்
நடிகை மீராமிதுன் அண்மைக்காலமாக நடிகர் நடிகைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி
அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குஜராத்தில் ஒரு அரண்மனை புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறதென்று, அங்கே
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திரைப்படப் படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஒருசில மாநிலங்களில் திரைப்படப் படப்படிப்புகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளன. அதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் நிபந்தனைகளுடன்
பிப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். அவர்களில் உதவி இயக்குநர் கிருஷ்ணாவும் ஒருவர். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரர் மதனின் இளைய மகள் அமிதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். விபத்தில் அவர் பலியானதை முன்னிட்டு நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் அவருக்குக் கொடுக்கப்பட்டது. நேற்று நடந்த எளிய நிகழ்வில் இந்த
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாகி உள்ளது. இந்தச் சங்கத்துக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர்.அச்சங்கத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடந்துவருகிறது. அச்சங்கத்துக்கு நடிகர்
தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன. நான்காவதாக இப்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன் தலைவராக இயக்குநர் பாரதிராஜா பொறுப்பேற்றிருக்கிறார். இதற்கு கலைப்புலி தாணு தலைமையில் ஒரு





















