ஆல்பம்,அங்காடித்தெரு,வெயில்,அரவான்,காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கதை நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷுடன்
சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள் பிறன் மனைவியை விரும்பி ஒழுகாத ஒழுக்கம், நிறைந்த பேராண்மையுடைய சான்றோர்க்கு அறம். அறம் மட்டுமன்று. ஒழுக்கமும் கூட. – திருக்குறள் விளக்கம் பிறர் மனைவியை விரும்பக்கூடாது என்று திருவள்ளுவர் சொல்லியிருந்தார். காலம் மாறிவிட்டது. கணவனைத் தவிர பிற ஆண்களை நோக்கக்கூடாது என்பதை இந்தப்படத்தில்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராக மிகவும் கோபமாக நடிகர் சிம்பு பேசியிருக்கிறார். முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவரும் பலியாகியிருக்கிறார். இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்ததோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவருடைய ட்வீட்டில்….. துப்பாக்கி சூட்டில் என்
ரசாக் இயக்கத்தில், ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். கே.பாக்யராஜ்,
2014 மார்ச் 8 ஆம் தேதி வெளியான படம் நிமிர்ந்துநில்.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி அமலாபால் சரத்குமார் உட்பட பலர் நடித்த அந்தப்படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது. ஜந்தாபாய்கப்பிராஜு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான அந்தப்படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக நானி நடித்திருந்தார். அமலாபால் சரத்குமார் ஆகியோர் அந்தப்படத்திலும் நடித்திருந்தார்கள். இப்போது அந்தப்படம் மீண்டும்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் கதை மும்பையில் நடப்பது போலப் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று பெரிய தாதா ஆகிறார் ரஜினி. அங்குள்ள மக்களுக்காக குறிப்பாகத் தமிழர்களுக்காகப் போராடுகிற வேடத்தில் நடித்திருக்கிறாராம் ரஜினி. ஒரு கட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்கள் வசிக்கும்
எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நுங்கம்பாக்கம் . இப்படத்தின் கதை வசனத்தை ஆர்.பி.ரவி எழுதி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மே 21 அன்று நடந்தது. விழாவில் பேசிய விஷால்.. இந்தப்படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான்
அண்மையில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில்























