சினிமா செய்திகள்

நயன்தாரா பற்றி ராதாரவியின் சர்ச்சைக்குரிய பேச்சு இதுதான்

மார்ச் 23 அன்று மாலை சென்னையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை விளம்பரப்படுத்தும் விழா நடைபெற்றது.

அதில் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை, தயாரிப்பாளரின் நண்பர் என்கிற அடிப்படையில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, நயன்தாரா நல்ல நடிகை, அவரைப் பற்றி நிறைய சர்ச்சைக்குரிய விசயங்கள் வந்தன. அவற்றைத் தாண்டி அவர் நிலைத்து நிற்பது பெரிய விசயம்.

அவர் இங்கு பேயாக நடிக்கிறார் தெலுங்கில் போய் சீதையாக நடிக்கிறார். முன்பெல்லாம் சாமியாக நடிக்க வேண்டுமென்றால் கே.ஆர.விஜயா அம்மாவை நடிக்க வைப்பார்கள். இப்போது சாமியாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகிவிட்டது.

கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என்று ஆகிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார் . இந்தப் பேச்சுதான் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts