உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி, நயன்தாராவை வைத்து எடுத்துள்ள படம் கொலையுதிர் காலம். இப்படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எட்செட்டெரா
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. நடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மார்ச் 23 அன்று மாலை சென்னையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை விளம்பரப்படுத்தும் விழா நடைபெற்றது. அதில் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை, தயாரிப்பாளரின் நண்பர் என்கிற அடிப்படையில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அவர் பேசும்போது, நயன்தாரா நல்ல நடிகை, அவரைப் பற்றி நிறைய சர்ச்சைக்குரிய விசயங்கள் வந்தன. அவற்றைத் தாண்டி அவர் நிலைத்து நிற்பது பெரிய விசயம். அவர் இங்கு














