சினிமா செய்திகள்

கொரோனாவுக்குப் பின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி

கொரோனா சிக்கல் காரணமாக தடைபட்டிருந்த திரைப்படப்படப்பிடிப்புகளை செப்செம்பர் 1 முதல் நடத்திக் கொள்ள தமிழக அரசு அறிவித்திருந்தது.

அவ்வறிப்பைத் தொடர்ந்து, விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது.

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் புதிய படத்தில் டாப்சி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தினை தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள இவர், நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ஜெகபதி பாபு,ராதிகா,யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது.தொடக்கத்தில் நாயகி டாப்சி,ராதிகா உள்ளிட்டோர் நடித்துவந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று விஜய்சேதுபதி கலந்துகொண்டார். ஞாயிறு விடுமுறை நாள் என்றில்லாமல் இன்றும் படப்பிடிப்பு நடக்கிறது.

திரைத்துறைக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

Related Posts