சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷை ஆச்சரியப்படுத்திய விஜய்

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான இது என்ன மாயம் முதல் தமிழ்ப்படம்.

2016 இல் வெளியான ரஜினிமுருகன் படத்தின் வெற்றி காரணமாக முன்னணி நடிகையானார்.

அதன்பின், விஜய் சூர்யா விக்ரம் விஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

2018 ஆம் ஆண்டில் அதாவது கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் வெளியான மகாநடி தெலுங்குப் படத்துக்காக சிறந்த நடிகை என்று தேசிய விருது பெற்றார்.

இப்படம் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதை என்பதும் இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத்தில் பெரிய மரியாதையைப் பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதியொன்றில் விருந்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

அந்த நிகழ்வில் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்களாம்.

இவ்விருந்தில் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்த விஜய் கலந்து கொண்டு சிறப்பித்தாராம்.

இதனால் கூடுதல் மகிழ்ச்சியாகிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

Related Posts