இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள சி.அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ள படம் பரம்பொருள். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, ஈ4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் அரங்கு
கொடூரமான கொலைகள் நடக்கின்றன, அவற்றை துப்புதுலக்கும் காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்குள் நடக்கும் நீயா நானா? போட்டி, அவற்றைத் தாண்டி தொழிலில் அவர்கள் காட்டும் திடம், குற்றவாளி யார்? ஏன்? ஆகியனவற்றை அழகாக வரிசைப்படுத்தியிருக்கும் படம் போர் தொழில். சரத்குமாரின் வேடம் அவருடைய அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது போலவே அமைந்திருக்கிறது. எதையும் சாதிக்கும் அறிவுத்திமிரை அழகாக
காவல்துறையில் கான்ஸ்டபிள் என்றழைக்கப்படும் கடைநிலைக்காவலர், மாநில முதலமைச்சர் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளியை எதேச்சையாக கைது செய்கிறார். அந்தக் குற்றவாளியைக் கொலை செய்ய காவல்துறை உயரதிகாரி ஒருவர் அலைகிறார்.அவரை மீறி குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த காவலர் முனைகிறார். அந்த ஓட்டத்துக்கு நடுவே காவலரின் காதலியும் வீட்டைவிட்டு ஓடிவந்து காவலருடன்
விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகையையொட்டி சனவரி 11 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்
செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். திரையுலகில் இப்படியான வெற்றிகள் அமைந்துவிட்டால், உடனே பார்ட்டி பார்ட்டி என்று ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு மணிரத்னமும் விதிவிலக்கல்ல. அவருடைய பெசண்ட்நகர் வீட்டில், பொன்னியின் செல்வன் வெற்றியைக் கொண்டாட ஒரு மதுவிருந்துக்கு
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் வந்தேவிட்டது. ஆதித்த கரிகாலனாக திரைமுழுதும் விக்ரம் தோன்றும் காட்சியில் ஒரு மாபெரும் காவியத்தின் தொடக்கம் எனப் புளங்காகிதத்துடன் நிமிர்ந்து உட்காருகிறோம். ஆதித்தகரிகாலன் வேடம் இவ்வளவுதானா? இன்னும் இருக்கா? என்று கேட்குமளவுக்கு அந்த வேடத்தின் வீரத்தை,கோபத்தை, ஏக்கத்தை தன் தேர்ந்த நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம்.
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர்
தமிழ்த்திரையுலகின் புது வசந்தம், பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர், பூவே உனக்காக படம் மூலம் நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் உள்ளிட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் விக்ரமன். அவருடைய மகன் விஜய் கனிஷ்கா,தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் படத்தின் பெயர் ஹிட்லிஸ்ட். இப்படத்தை
நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் நேற்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.





















