விஜய்சேதுபதி இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல், கமல்ஹாசனோடு விக்ரம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் ஓர் இணைய தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தமிழில் ஓர் இணையத்தொடர் தயாரிக்கத் திட்டமிட்ட பிரபல இணைய நிறுவனம் அதில் நடிக்க வேண்டுமெனக் கேட்டு
தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு முன்பே ராட்சசன் இயக்குநர் ராம்குமார்
கிஷோர், சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
விஜய்யின் 65 ஆவது படத்தின் இயக்குநர் நெல்சன். இவர் 2010 ஆம் ஆண்டில் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தொடங்கினார். அப்படம் நடக்கவில்லை. அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பு அவருக்குக்
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு வந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. சிம்புவிடம் ஒரு கதையை மிஷ்கின் சொல்லியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் விரைவில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிற பேச்சு வந்தது. மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதியபடத்தை
விஜய் நடித்த மாஸ்டர் விரைவில் வெளியாகவிருக்கிறது. மாஸ்டர் விஜய்யின் 64 ஆவது படம். இதற்கடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது. அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜ், இப்போது தமிழை விட அதிகமாக தெலுங்கில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்கிக் கொண்டிருந்த சத்யராஜ், பாகுபலி படத்தில் நடித்த போது, ஒரு நாளைக்கு இரண்டு இலட்சம் சம்பளம் வாங்கினார். அப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் சுமார் ஓராண்டு வரை நடைபெற்றது. அதற்காக அவர் எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார் என்று
















