சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் – அரண்டு போன நிறுவனம்

விஜய்சேதுபதி இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல், கமல்ஹாசனோடு விக்ரம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியில் ஓர் இணைய தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில், தமிழில் ஓர் இணையத்தொடர் தயாரிக்கத் திட்டமிட்ட பிரபல இணைய நிறுவனம் அதில் நடிக்க வேண்டுமெனக் கேட்டு விஜய்சேதுபதியை அணுகியதாம்.

கதை மற்றும் இயக்குநர் ஆகிய விசயங்கள் பேசப்பட்ட பின்பு சம்பள விசயம் பற்றிப் பேச்சு வந்ததாம்.
அப்போது, விஜய்சேதுபதி தரப்பில் முப்பது கோடி சம்பளம் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள்.

இதனால் அரண்டுபோன இணைய நிறுவனம் அந்த இணையத் தொடர் தயாரிப்பையே நிறுத்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி விஜய்சேதுபதி இவ்வளவு சம்பளம் கேட்கலாமா? என்கிற குற்றச்சாட்டையும் திரையுலகினரிடையே சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

அதற்கு, விஜய்சேதுபதி, இரண்டு மணி நேரப்படத்தில் நடிப்பதற்கே எட்டு, பத்து, பதினைந்து என படத்துக்கேற்ப சம்பளம் வாங்குகிறார்.

இந்நிலையில் பல மணி நேரங்கள் ஒளிபரப்பாகக் கூடிய இணையத்தொடருக்கு அதற்கேற்ப சம்பளம் கேட்பதில் என்ன தப்பு?என்பது அவருடைய தரப்பு வாதமாக இருக்கிறது.

சரிதானே?

Related Posts