சினிமா செய்திகள் நடிகர்

அஜித் செய்வது நியாயமா? – குமுறும் தயாரிப்பாளர்கள்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

‘விசுவாசம்’ படத்தைத் தொடர்ந்து, ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அஜித் – வினோத் இணையும் இந்தப் படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

போனிகபூர் குடும்பம் பெரும் கடனில் சிக்கித் தவிப்பதாகவும், அதற்காகவே அவர்களுக்கு ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டார் என்றும் செய்திகள் வந்தன.

இந்தத் தகவல் தெரிந்ததும் தமிழ்த்திரையுலகில் பலர் கோபமாகிவிட்டனர்.

தமிழ்ப்படங்களை மட்டுமே தயாரித்து பெரும் நட்டத்தைச் சந்தித்த பல தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர்.

அஜித்தை வைத்துப் படமெடுத்த சிலரும் அவர்களில் அடக்கம்.

அவர்களெல்லாம் அஜித் கண்களில் படவில்லையா?

ஸ்ரீதேவியைத் திருமணம் செய்ததைத் தவிர தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத போனிகபூர் கடனில் கஷ்டப்படுகிறார் என்றதும் கை கொடுக்கிறார் என்பது எதனால்?

தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்துப் புகழ்பெற்ற அஜித்துக்கு, தமிழ்ப்படங்களை மட்டுமே தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் மனம் வரவில்லையே? ஏன்?

இப்படிப் பலர் கேள்வி கேட்கிறார்கள். விடை சொல்லத்தான் யாருமில்லை.

Related Posts