ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் வெற்றி பெற்ற ‘காஞ்சனா’வின் முதல் பாகத்தை இந்தியில் மொழிமாற்று செய்ய நடிகர் அக்ஷய் குமார் முடிவெடுத்தார். அந்தப்படத்தை இயக்கும் வேலையை லாரன்சிடமே கொடுத்தார். வீரம், விவேகம்,விஸ்வாசம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் செய்து வரும் அறம் சார்ந்த சேவைகள் எல்லாம் பலபேரை வாழ்வில் கரம் பிடித்துத் தூக்கி விட்டிருக்கிறது. தன் அன்னைக்குக் கோவில் கட்டியதோடு இல்லாமல் கடந்த அன்னையர் தினத்தன்று தாய் அமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களைக் காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார். அதைப்போலவே தன்னை நாடி வரும்
ஏப்ரல் 19 அன்று ‘காஞ்சனா 3’ படம் வெளியானது. இந்தப் படம் கோடை விடுமுறை நாளில் வெளியானதால் மக்கள் கூட்டம் அலை மோதியது. . ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், ஒரே மாதிரியான பேய்க் கதை,பழைய நகைச்சுவைகள் என்று கிண்டலுக்கு ஆளானது. ஆனாலும் அவற்றைத் தாண்டி படத்தின் வசூல் பெரிதாக இருக்கிறது. இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் வசூலில் தயாரிப்பாளரின் பங்கு இதுவரை
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும்,நாயகியாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 3 ஆவது
தம் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னைப்பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலைப் படாதீர்கள். என் மீது அக்கறை உள்ள ஒரு சில
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம், ‘காஞ்சனா-3. ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, ஸ்ரீமன் தேவதர்ஷினி, டெல்லி கணேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கதையில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும், குடும்பத்துடன் சென்று படத்தைப் பார்க்கலாம் என்ற பெயரைச் சம்பாதித்துள்ளது. ‘காஞ்சனா-3’ படத்துக்கு குடும்பம்
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்தில் வேதிகா, ஓவியா,கோவைசரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியான நாளில், லாரன்ஸ் ரசிகர்கள் அவருடைய கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். அதிலும்
பயமுறுத்தும் பேய்களுக்கு மத்தியில் சிரிக்க வைக்கும் பேய்களைக் காட்டி குழந்தைகளைக் கவர்ந்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா 3 படத்திலும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார். பேய்க்கு பயப்படும் லாரன்ஸ் உடலிலேயே பேய் புகுந்துகொண்டால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்தப்படமும். லாரன்சின் நிஜ வாழ்க்கை போலவே இப்படக்கதையிலும்,ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை ஆதரித்து பாதுகாக்கிறார்.
நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இன்று மாலை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில்….. “வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!”* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று
சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ்




















