பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் பிரபாஸ்,
பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். இப்படம் சனவரி 14,2022 அன்று வெளியாகும் என்று
பாகுபலி படம் மூலம் தமிழகத்துக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.இவர் நடித்து பத்தொன்பது படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அதற்குள் இவர் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் சண்டைக்காட்சிகளில் பிரமிப்பூட்டுவது மட்டுமின்றி நடிப்பிலும் ஆச்சரியமூட்டுகிறவராக இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ரெபல் பல சாதனைகளைச் செய்தது. அப்படம்
ஐதர்அலி காலத்துப் பழிவாங்கும் கதை. கோடிகளைக் கொட்டி மாயாஜாலம் காட்டியிருக்கிறார்கள். படம் தொடங்கும் போதே ராய் என்கிற பெரிய தாதா, தன் சாம்ராஜ்யத்தை எப்படி பெரிதாக்கினார் இப்போது என்ன நிலை என்பது உட்பட நீண்ட அறிமுகம் நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுவே போதும் என்றாகிவிடுகிற நேரத்தில்,பிரபாஸ் வருகிறார். அவர் வரும்போதே ஒரு சண்டையுடன் வருகிறார். ஒரு ஆளிடம் ஒரு
இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார். தொடங்கியதோடு நின்றிருக்கிறது. அது மேற்கொண்டு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன என்கிறார்கள். இந்நிலையில் ஷங்கர் அதிரடியாக அடுத்த படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார் என்று சொல்லப்பட்டது. இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிட்டாராம். இந்தப்படத்தைத்
















