நடிப்பு பிரதானமாக இருந்தாலும் சமூக சேவையிலும் சமூக நலனுக்காக அக்கறை செலுத்துபவர்களில் நடிகர் கார்த்திக்கும் ஒருவர். அவருக்கு நடிப்பைத் தாண்டி விவசாயத்தில் ஆர்வம் அதிகம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகள் செய்தார். விவசாயத்தை மையப்படுத்தி அவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’
ஸ்ரீ, சுதீப் கிஷன், ரெஜினா உட்பட பலர் நடிப்பில் வெளியான மாநகரம் படத்தை இயக்கியவர் புதுமுகம் லோகேஷ் கனகராஜ். 2017 இல் வெளியான அந்தப்படம் நல்ல வரவேறபையும் வசூலையும் பெற்றது. அதன் காரணமாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்கனகராஜை அழைத்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் கதாநாயகியே இல்லாமல் உருவாகும் அந்தப்படத்தின் பெயர் கைதி.













