ஈழத்தமிழ் ஏதிலிகளின் வலியைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர். 2000 ஆண்டுகளுக்குப் பின் நம் இனம் இப்படி ஒரு வலியைச் சந்திக்கும் என்று கணித்தாரோ கணியன்பூங்குன்றன்? அவர் அன்றைக்குச் சொன்ன சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இந்தப்படம் பார்க்கும்போது புரியும்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் சொல்லிவிட்டு பல குற்றங்கள் நடக்கின்றன. தொடக்கத்தில் அந்தத் தகவலை அலட்சியப்படுத்தும் காவல்துறை, ஊடகங்களுக்குச் செய்தி தெரிந்து சிக்கல் பெரிதானதும் தீவிரமாகக் களமிறங்குகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? முன்கூட்டியே தகவல் சொல்லும் மர்மநபர் யார்? என்கிற இரகசியங்களை வெளிப்படுத்தும் படம் தீர்க்கதரிசி. காவல்துறை அதிகாரியாக வரும்
நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்து வந்த ரமேஷ்திலக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் யானை முகத்தான். பெயரைப் பார்த்ததுமே இது விநாயகக் கடவுள் சம்பந்தப்பட்ட படம் என்பது தெரிந்துவிடும். நாயகன் ரமேஷ்திலக் தீவிர விநாயக பக்தர்.ஆட்டோ ஓட்டும் தொழிலில் இருக்கும் அவர் அதைச் சரியாகச் செய்யாமல் எல்லோரையும் ஏமாற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.அதனால் ஒரு கட்டத்தில் அவர்
நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார் அருள்நிதி. கட்டிடப்பொறியாளரான அருள்நிதி அப்பா பாரதிராஜாவுடன் வாழ்ந்துவருகிறார்.
கோவை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பேய் பலரைக் கொல்கிறது. அப்படிக் கொல்லப்படுவர்களிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமை என்ன? அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? என்பனவற்றை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் ரிப்பப்பரி. மாஸ்டர் மகேந்திரன் கொடுக்கப்பட்டிருக்கும் வேடத்தின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். அவர் பயப்பட்டு நம்மைச் சிரிக்க
சின்னச் சின்ன திருட்டுகள் மற்றும் அடிதடிகளில் ஈடுபடும் குற்றவாளி நாயகன் நிஷாந்த் ரூசோ.ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் நேரத்தில்,காட்டுக்குள் ஒருவர் பிணமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வருகிறது. அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே சென்று பிணமாகக் கிடக்கும் விவேக்பிரசன்னாவைக் கண்டறிகிறார்கள்.அவருடன் நாயகனின்
மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல். சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார். அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி தேவநந்தா. அந்தப் பயணத்தில் அவர்களை ஆபத்து சூழ்கிறது.
வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் அப்பா திடீரென இறந்துவிடுகிறார். அதனால் அம்மாவும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிடுகிறான். இந்தச் சூழலில் அப்பா ஓட்டிய வண்டியை ஓட்டத் தொடங்குகிறார் ஐஸ்வர்யாராஜேஷ். ஒருநாள் அவருடைய வண்டியில் கூலிப்படையினர் ஏறுகிறார்கள். அவர்களைக் காவல்துறை துரத்துகிறது.கூலிப்படையினர் ஐஸ்வர்யாராஜேஷை பணயக்கைதி போல்
காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் சித்தம் கலங்கிப் போகிறார். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார். அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் கடைசிகாதல்கதை. அறிமுக நடிகர்
ஒரு படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு அதன் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப்படம் பிராஜெக்ட் சி பாகம் 2. புதுமுக நாயகன் ஸ்ரீ, விஞ்ஞானியாக ராம்ஜி, விஞ்ஞானி வீட்டு வேலைக்காரம்மாவாக வசுதாகிருஷ்ணமூர்த்தி, மருத்துவராக சாம்ஸ் ஆகியவர்களோடு மேலும் ஓரிரு கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினோ. நாயகன் ஸ்ரீ




















