அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ட்ராமா. விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர்
பல்வேறு வெற்றிப் படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் பல வெற்றித் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா
கற்பனைக்கு எல்லை கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு விநோதமான நோயை உருவாக்கி அதைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து இரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்து கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும் படம் குடிமகான். குடிமகன் என்பதைத் தவறாக எழுதிவிடவில்லை. படத்தின் பெயரே அதுதான். நாயகன் விஜய்சிவன் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானியன். அவருக்கு ஜங்க்ஃபுட் எனப்படும் நொறுக்குத்தீனிகள்
சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் திவ்யா காதல் திருமணம் மற்றும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளின் காட்சி வடிவமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் வ.கீரா. அதை மட்டும் நேரடியாகச் சொல்லிவிடாமல், வெவ்வேறு வயது, வெவ்வேறு மதம், வெவ்வேறு வர்க்கம் ஆகிய பின்புலங் கொண்ட காதல் இணைகளை வைத்துச் சொல்லியிருக்கிறார்கள். காதல் இணைகளாக நடித்திருக்கும் சாந்தினி
வர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க, எஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், “எட்டுத்திக்கும் பற ” சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கனவுகளையே உணவாக உண்டு வாழும் திரைப்பட உதவி இயக்குநர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது. உதவி இயக்குநரான நாயகன் சந்தோஷ்,உறவினரின் முகவரியைத் தொலைத்துவிட்ட நாயகி சாந்தினியைக் காண்கிறார். அவருக்கு உதவி செய்யப்போக எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறது
‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது. சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக
சமுத்திரக்கனி,நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ள திரைப்படம் பற. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வ.கீரா. இப்படத்துக்கு ஔிப்பதிவு சிபின் சிவன், இசை ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள் உமாதேவி, சினேகன், படத் தொகுப்பு சாபு ஜோசப், கலை இயக்கம்
பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன, அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறெல்லாம் நிலைநிறுத்துகின்றன? என்பதையும், மக்களைப்
லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் பெட்டிக்கடை. இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக





















